பதிவு செய்த நாள்
03 மே2022
07:11
டி.வி.எஸ்., விற்பனை அதிகரிப்பு
‘டி.வி.எஸ்., மோட்டார் சைக்கிள்’ நிறுவனத்தின் விற்பனை, கடந்த ஏப்ரலில் 24 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில், மொத்தம் 2.39 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரலில், விற்பனை 2.95 லட்சம் ஆக அதிகரித்து உள்ளது.
‘டாடா காபி’ இணைப்பு
‘டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்’ நிறுவனத்துடன், ‘டாடா காபி’ நிறுவனத்தை இணைக்கும் பணிகள் இன்னும் 12 – 14 மாதங்களில் நிறைவு பெற்றுவிடும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இணைப்புக்கு, எந்தவிதமான தடையும் இருக்காது என கருதுவதாக, டாடா குழும உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருந்து ஏற்றுமதி அதிகரிப்பு
நாட்டின் மருந்து ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில், கிட்டத்தட்ட 1.83 லட்சம் கோடி ரூபாயை எட்டி இருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013 – 14ல், மருந்து ஏற்றுமதி, 90 ஆயிரத்து 415 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளியேறும் அன்னிய முதலீட்டாளர்கள்
அன்னிய முதலீட்டாளர்கள், தொடர்ந்து 7வது மாதமாக, இந்திய சந்தைகளிலிருந்து முதலீட்டை வெளியே எடுத்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட 17 ஆயிரத்து 144 கோடி ரூபாயை அவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
சரிவில் ‘பஜாஜ் ஆட்டோ’
‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் விற்பனை, கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில், மொத்தம் 3.88 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நடப்பாண்டு ஏப்ரலில் 3.11 லட்சமாக சரிவை கண்டுள்ளது.
மின்சார நுகர்வு அதிகரிப்பு
நாட்டின் மின்சார நுகர்வு, கடந்த ஏப்ரல் மாதத்தில், 13.6 சதவீதமாக அதிகரித்து, 13 ஆயிரத்து 298 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
முன்கூட்டியே துவங்கிய கோடைகாலம் மற்றும், அதிகரித்து வரும் பொருளாதார செயல்பாடுகள் ஆகியவை காரணமாக, மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|