பதிவு செய்த நாள்
19 மே2022
20:01
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரிகளில் ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் பேனா, பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை மந்தமானது. இதையடுத்து, உற்பத்தி நிறுவனங்கள் தயாரிப்பை குறைத்துக் கொண்டன.
கொரோனா பாதிப்பு குறையவும், 2021 செப்டம்பர் முதல் பள்ளி, கல்லுாரிகளில் வழக்கமான வகுப்புகள் துவங்கின. ஆனால், பிற நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் பேனா, பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களின் இறக்குமதி போதிய அளவில் இல்லை. ஏற்கனவே நோட்டு, புத்தகங்கள் விலை, 40 சதவீதம் வரை அதிகரித்த நிலையில், தற்போது, ஸ்டேஷனரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பேனா விலை, 25 – 30 சதவீதம், பென்சில் விலை, 18 – 25 சதவீதம், ஸ்கேல், ஜாமென்ட்ரி பாக்ஸ், மார்க்கர் உள்ளிட்ட பொருட்களின் விலை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது:இந்தியாவில், ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் முன்னணி நிறுவனங்கள், அதன் தயாரிப்பு போக, இறக்குமதி செய்து, அவற்றை தங்கள் பெயரில் விற்று வந்தன.தற்போது சீனாவில் இருந்து எழுது பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிற நாடுகளில் இறக்குமதி செய்யும் நிலையில், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது.அத்துடன் பேனா, பென்சில் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டால் உற்பத்தி குறைந்து, எதிர்பார்த்த அளவுக்கு வினியோகம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|