வர்த்தக துளிகள்வர்த்தக துளிகள் ... 18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ 18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்கிறது ‘மாருதி’ ...
பேனா, பென்சில் விலை 30 சதவீதம் வரை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2022
20:01

சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

கொரோனாவால் இரு ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரிகளில் ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் பேனா, பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை மந்தமானது. இதையடுத்து, உற்பத்தி நிறுவனங்கள் தயாரிப்பை குறைத்துக் கொண்டன.

கொரோனா பாதிப்பு குறையவும், 2021 செப்டம்பர் முதல் பள்ளி, கல்லுாரிகளில் வழக்கமான வகுப்புகள் துவங்கின. ஆனால், பிற நாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் பேனா, பென்சில் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களின் இறக்குமதி போதிய அளவில் இல்லை. ஏற்கனவே நோட்டு, புத்தகங்கள் விலை, 40 சதவீதம் வரை அதிகரித்த நிலையில், தற்போது, ஸ்டேஷனரி பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பேனா விலை, 25 – 30 சதவீதம், பென்சில் விலை, 18 – 25 சதவீதம், ஸ்கேல், ஜாமென்ட்ரி பாக்ஸ், மார்க்கர் உள்ளிட்ட பொருட்களின் விலை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது:இந்தியாவில், ஸ்டேஷனரி பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் முன்னணி நிறுவனங்கள், அதன் தயாரிப்பு போக, இறக்குமதி செய்து, அவற்றை தங்கள் பெயரில் விற்று வந்தன.தற்போது சீனாவில் இருந்து எழுது பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளில் இறக்குமதி செய்யும் நிலையில், போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது.அத்துடன் பேனா, பென்சில் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாட்டால் உற்பத்தி குறைந்து, எதிர்பார்த்த அளவுக்கு வினியோகம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)