பதிவு செய்த நாள்
20 மே2022
20:55
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற சேவைகளை வழங்குவதாக அறிவிக்கும் விளம்பரங்களை நிறுத்துமாறு, ஐ.ஆர்.டிஏ.ஐ., கூறியுள்ளது.
இத்தகைய சேவைகள், காப்பீட்டு கவரேஜின் அங்கம் கிடையாது என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துஉள்ளது.பொது காப்பீட்டு நிறுவனங்கள், விபத்துக்குள்ளாகும் வாகனங்களை பழுது நீக்கி தருவதற்கான காப்பீட்டு கோரலை வழங்க, பழுது நீக்கும் நிறுவனங்களுடன் சேவை ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.
இந்நிலையில், பழுதான வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு வந்து விடுவது, வாகனத்தை சுத்தம் செய்து தருவது, வாகனத்தை பரிசோதிப்பது போன்ற, ஒப்பந்தத்தை தாண்டிய சேவைகளை வழங்குவதாக பல நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களில் அறிவிக்கின்றன. இவை காப்பீட்டு கவரேஜுக்குள் இருப்பது போன்று கூறப்படுகின்றன.
இத்தகைய அறிவிப்புகள் ஏற்றுக் கொள்ள முடியாதது என, ஆணையம் தெரிவித்து உள்ளது.காப்பீட்டு கோரல்களுக்கு பொருந்தாத சேவைகளை, வழங்குவதாக அறிவிப்பது தவறு என்று தெரிவித்துள்ளது.எனவே, காப்பீட்டு கோரல்களுக்கு சம்பந்தமில்லாத சேவைகளை வழங்குவதாக அறிவிப்பதை நிறுத்துமாறு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|