பதிவு செய்த நாள்
24 மே2022
21:35
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்
விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, செப்டம்பரில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், 8,430 கோடி ரூபாய் திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, கடந்த ஆண்டு அக்டோபரில் விண்ணப்பித்திருந்தது.
பங்குகளை வாங்கிய மாருதி
‘மாருதி சுசூகி’ நிறுவனம், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான, ‘சோஷியோகிராப்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளது.இந்நிறுவனத்தின், 12.09 சதவீத பங்குகளை, 2 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாக, மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
நுகர்வோர் சேவைக் கட்டணம்
உணவகங்களில், நுகர்வோர் சேவைக் கட்டணம் வாங்குவது தொடர்பாக, அண்மைக் காலமாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், இப்பிரச்னை குறித்து ஆராய, ஜூன் 2ம் தேதி, இந்திய தேசிய உணவகங்கள் சங்கத்துடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் குழு
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மற்றும் அது சம்பந்தமான செயல் திறன், தரம் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய, ஒரு குழுவை அமைத்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ஆறு உறுப்பினர்களை கொண்ட இக்குழு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் பி.பி.கனுன்கோ தலைமையில் செயல்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரியல் எஸ்டேட் முதலீடு
ரியல் எஸ்டேட் துறையில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், பங்கு முதலீடு, 62 சதவீதம் குறைந்து, 9,204 கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், இத்துறையில் பங்கு முதலீடு, 24 ஆயிரத்து, 24 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|