பதிவு செய்த நாள்
31 மே2022
02:48
புதுடில்லி : ‘போர்டு இந்தியா’ நிறுவனத்துக்கு சொந்தமான, குஜராத்தில் உள்ள தொழிற்சாலையை, ‘டாடா மோட்டார்ஸ்’ கையகப்படுத்த உள்ளது.குஜராத் மாநிலம் சானந்த்தில் உள்ள இந்த ஆலையை கையகப்படுத்துவதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘டாடா பாசஞ்சர்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி’ நிறுவனமும், போர்டு இந்தியா நிறுவனமும், குஜராத் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இதையடுத்து போர்டு இந்தியாவின் ஆலை, நிலம், கட்டடங்கள், இயந்திரங்கள், சாதனங்கள் ஆகிய அனைத்தும் டாடா வசம் ஆகிறது.மேலும் இந்த ஒப்பந்தப்படி, தகுதி வாய்ந்த அனைத்து போர்டு ஊழியர்களும் டாடா நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.இது குறித்து, ‘டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர்ஸ் வெகிக்கிள்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது:கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டாடா மோட்டார்ஸ், குஜராத்தில் சொந்த ஆலை வசதியுடன், மிக வலுவாக உள்ளது.இந்நிலையில், இந்த ஒப்பந்தம், வணிக வாய்ப்பை அதிகரிக்க உதவுவதுடன், மாநிலத்தில் கூடுதல் வேலை வாய்ப்புக்கும் உதவுவதாக இருக்கும்.இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|