பதிவு செய்த நாள்
04 ஜூன்2022
19:36
புதுடில்லி:கடந்த இரண்டு வாரங்களில், எல்.ஐ.சி., நிறுவன பங்குதாரர்கள்,94 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடுமையான ஏற்ற – இறக்கங்கள் காரணமாக, கடந்த 14 நாட்களில், எல்.ஐ.சி., பங்குதாரர்கள் 94 ஆயிரத்து 116 கோடி ரூபாயை இழந்துள்ளனர்.கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளியன்று, நிறுவனத்தின் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 5.06 லட்சம்கோடி ரூபாயாக சரிந்தது.
இதையடுத்து, சந்தையில் அதிக மதிப்பு கொண்ட நிறுவனங்கள் வரிசையில் எல்.ஐ.சி., ஆறாவது இடத்துக்கு இறங்கியது. இந்நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது, சந்தை மதிப்பில், ஐந்தாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.எல்.ஐ.சி., ஆறாவது இடத்துக்கு வந்ததை அடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.
கடைசி வர்த்தக நாளான வெள்ளியன்று, எல்.ஐ.சி., பங்குகள் விலை, வெளியீட்டு விலையிலிருந்து 7.72 சதவீதம் சரிவைக் கண்டது. அதாவது 67 ரூபாய் சரிந்தது.இருப்பினும், நீண்ட காலத்தில் நல்ல பலனை எல்.ஐ.சி., தரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|