பதிவு செய்த நாள்
04 ஜூன்2022
19:35
கோல்கட்டா:பங்குச் சந்தை வாயிலாக, 600க்கும் மேற்பட்ட எஸ்.எம்.இ., எனும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் 7,600 கோடி ரூபாயை திரட்டி உள்ளன என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யின் முழு நேர உறுப்பினர் அனந்த பரூவா கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:கடந்த 2021ம் ஆண்டு வரை, 600க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர நிறுவனங்கள், பங்குச் சந்தை வாயிலாக 7,600 கோடி ரூபாயை திரட்டி உள்ளன.கடந்த ஆண்டு கொரோனா இடையூறுகள் பல இருந்த போதிலும், 64 சிறு, நடுத்தர நிறுவனங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் வாயிலாக 900 கோடி ரூபாயை திரட்டி உள்ளன.
கொரோனா காலத்தில், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தங்களுடைய விதிமுறைகளில் பல தளர்வுகளை மேற்கொண்டு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டிக்கொள்ள உதவி செய்து உள்ளன.
இதேபோல், எஸ்.எம்.இ., தளத்தில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்கள், பங்குச்சந்தையின் விதிமுறைகளை நிறைவேற்றி, பிரதான தளத்துக்கு மாறியுள்ளன. இந்த வகையில், மும்பை பங்குச் சந்தையில் 113 நிறுவனங்களும்; தேசிய பங்குச் சந்தையில் 102 நிறுவனங்களும் பிரதான தளத்துக்கு இடம்பெயர்ந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|