பதிவு செய்த நாள்
05 ஜூன்2022
18:59
முதலீடு பரவலாக்கத்திற்காக பெரும்பாலானோர் ‘டிஜிட்டல்’ தங்கம் வடிவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டிஜிட்டல் தங்கம் முதலீடு சேவையை வழங்கும் ‘சேப்கோல்ட்’ நிறுவனம், முதலீட்டாளர்கள் பழக்கங்களை அறிவதற்காக ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆயிரம் பங்கேற்பாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 96 சதவீதம் பேர், தங்கள் முதலீடு வழியாக டிஜிட்டல் தங்கத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 46 சதவீதம் பேர், பண்டிகை காலம் போன்றவற்றில் தங்கத்தில் முதலீடு செய்வதாக தெரிவித்து உள்ளனர். எனினும், 26 சதவீதம் பேர் மாதந்தோறும் தங்கத்தில் முதலீடு செய்வதாக தெரிவித்து உள்ளனர்.டிஜிட்டல் தங்கம் முதலீட்டை இடர் இல்லாத பாதுகாப்பான முதலீடாக பலரும் கருதுகின்றனர். இது முதலீடு பரவலாக்கத்திற்கும் உதவுவதாக கருதப்படுகிறது.
பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் நீண்ட கால பலன் காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வதாக பலரும் தெரிவித்துள்ளனர்.ஆய்வில் பங்கேற்றவர்களில், 38 சதவீதம் பேர் ‘கிரிப்டோ கரன்சி’ முதலீடு தொடர்பான விஷயங்கள் தங்களுக்கு புரியவில்லை என தெரிவித்துள்ளனர். பலரும் இதில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|