பதிவு செய்த நாள்
05 ஜூன்2022
19:01
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேவை அதிகரித்து வருவதை அடுத்து, ‘ரியல் எஸ்டேட்’ மீண்டும் எழுச்சி பெறத்துவங்கியிருப்பதாக கருதப்படுகிறது. வீடுகள்பிரிவில் தேவை அதிகரித்திருப்பதோடு, பெருந்தொற்று பாதிப்புக்கு பிறகு அலுவலக பரப்பிற்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
இந்த பின்னணியில், முதலீடு நோக்கிலும் ரியல் எஸ்டேட் ஈர்ப்புடையதாக அமைகிறது. வீடு, வர்த்தக ரியல் எஸ்டேட் என பலவிதங்களில் முதலீடு செய்யலாம் என்றாலும், மற்ற முதலீடுகள் போலவே இதிலும் இடர் உண்டு என்பதை அறிய வேண்டும். ரியல் எஸ்டேட் முதலீட்டில் இடர்களை குறைப்பதற்கான வழிகள்:
சந்தை ஆய்வு:
முதலீடு செய்வதற்கு முன், சந்தை ஆய்வு மேற்கொள்வது அவசியம். சந்தையின் தேவை, விலை ஆகிய அம்சங்களை அலசுவதோடு, சந்தையின் எதிர்கால போக்கு எப்படி இருக்கும் என்றும் ஆராய வேண்டும். உள்கட்டமைப்பு வசதி, அருகாமையில் உள்ள வர்த்தக வசதிகள், நிறுவனங்கள் ஆகியவற்றையும் பரிசீலிக்க வேண்டும்.
பரவலாக்கம்:
சந்தை ஆய்வு சரியான முதலீட்டிற்கான சிறந்த இடத்தை தேர்வு செய்ய உதவும். எனினும், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை வாங்குவதாக இருந்தால், ஒரே நகரில் கவனம் செலுத்துவதை விட, பொருத்தமான வேறு சந்தைகளையும் பரிசீலிக்க வேண்டும். இந்த பரவலாக்கம், இடர் தன்மையை குறைக்கும்.
பல வகை முதலீடு:
இருப்பிடத்தில் மட்டும் அல்லாமல், முதலீடு வகையிலும் பரவலாக்கத்தை நாட வேண்டும். உதாரணமாக, வாடகையை மனதில் கொண்டு வீடு வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், வர்த்தக இடங்கள், கிடங்குகள், கடைகள் போன்றவற்றில் முதலீடு செய்வதை பரிசீலிக்கலாம். ஒரு பிரிவில் இறங்குமுகம் இருந்தாலும், மற்ற பிரிவு கைகொடுக்கும்.
நம்பகத்தன்மை:
வீடு அல்லது வர்த்தக இடத்தை வாங்கும் போது, கட்டுமான நிறுவனத்தின் நம்பகத் தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரிய நிறுவனங்களும் கூட சிக்கலுக்கு உள்ளாவதை மனதில் கொண்டு, கட்டுமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பரிசீலித்து, சரியான வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.
கால அளவு:
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் போது, அதற்கான கால அளவு குறித்தும் தெளிவாக இருக்க வேண்டும். நிலம் போன்றவை பலன் அளிக்க நீண்ட காலம் ஆகலாம். அதற்கேற்ப பொறுமை தேவை. வாடகை வருமானம் என்றாலும், அதற்கேற்ப முதலீட்டை திட்டமிட வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|