பதிவு செய்த நாள்
13 ஜூன்2022
02:17
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ நினைப்பதில்லை. சுயமாக சம்பாதிக்க
துவங்கியிருக்கும் மகிழ்ச்சியில், விரும்பிய வகையில் செலவுகளை மேற்கொள்ளவே
தோன்றும்.
ஆனால், யோசிக்காமல் செலவு செய்யும் இந்த பழக்கத்தை
துவக்கத்திலேயே கிள்ளியெறிந்தால், சம்பாதிக்கும் பணத்தை சரியாக திட்டமிட்டு
நிதி எதிர்காலத்தை பிரகாசமாக்கி கொள்ளலாம். அந்த வகையில், சேமிப்பையும்,
முதலீட்டையும் முதல் சம்பளத்தில் இருந்து துவக்குவது பொருத்தமாக இருக்கும்.
சேமிப்புக்கு
முதலிடம்: சம்பளத் தொகையை செலவிடும் முன் சேமிப்புக்கு என ஒதுக்குவது
அவசியம். இருபது சதவீதம் வரை சேமிப்பது நல்லது. குறைந்த தொகையில் கூட,
எஸ்.ஐ.பி., முறையில் மியூச்சுவல் பண்ட் முதலீட்டை மேற்கொள்ளலாம். பின்னர்
இந்த தொகையை அதிகமாக்கி கொள்ளலாம். முதலீடு சீராக வளரும்.
பி.பி.எப்.,
கணக்கு: பொது சேமநல நிதியான பி.பி.எப்., கணக்கை வங்கி அல்லது அஞ்சலகம்
மூலம் துவக்கலாம். இயன்ற தொகையை முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீடான
இது, ஓய்வு காலத்திற்காக சேமிப்பதோடு, துவக்கத்திலேயே முதலீடு செய்வதன்
மூலம் கூட்டு வட்டியின் பலனையும் பெற்றுத்தரும்.
காப்பீடு: ஒருவர்
போதுமான காப்பீடு பெற்றிருப்பது அவசியம். பொருத்தமான மருத்துவ காப்பீடு
திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், எதிர்பாராத மருத்துவ செலவுகளை
சமாளிக்கலாம். மருத்துவ காப்பீடு வருமான வரி நோக்கில் உதவும் என்பதோடு,
இளம் வயதில் பிரிமியமும் குறைவாக இருக்கும்.
சேமிப்பு கணக்கு:
முக்கிய முதலீடுகளை துவக்குவது போலவே எதிர்பாராத செலவுகளை எதிர்கொள்வதற்கான
அவசரகால நிதியை உருவாக்குவது அவசியம். சேமிப்பு கணக்கில் இருக்கும்
தொகையில் ஒரு பகுதியை வைப்பு நிதி அல்லது லிக்விட் பண்டிற்கு மாற்றி அவசர
கால நிதியை உருவாக்கலாம்.
பங்கு முதலீடு: பல வகையான முதலீடு
வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றின் தன்மையை அறிந்து செயல்பட வேண்டும். சம
பங்கு முதலீடு நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும். அதே நேரத்தில் கடன்சார்
முதலீடும் தேவை. டிஜிட்டல் வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|