பதிவு செய்த நாள்
09 மார்2011
01:27
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் சூடுபிடித்து காணப்பட்டது. லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், இதன் உற்பத்தியை அதிகரிப்பதாக தெரிவித்தன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அன்று, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 2 டாலர் குறைந்தது. மேலும், இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இது போன்ற காரணங்களால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.செவ்வாய்க்கிழமை அன்று, நடை பெற்ற பங்குச் வியாபாரத்தில், தகவல் தொழில் நுட்பம், வங்கி, உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதகரித்திருந்தது. அதே சமயம், நுகர்பொருள் துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு குறைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது 216.98 புள்ளிகள் அதிகரித்து 18,439.65 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,466.81 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,266.62 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 26 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 4 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 57.65 புள்ளிகள் உயர்ந்து, 5,520.80 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,530.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,464.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|