பதிவு செய்த நாள்
10 மார்2011
16:39
பார்லிமென்ட்டில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த, பொது பட்ஜெட், சைக்கிள் உற்பத்தியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. வரி விதிப்பினால், சைக்கிள்களின் விலையில் ரூ.60 வரை உயர உள்ளது. இந்தியாவில் சைக்கிள் உற்பத்தியில், லுõதியானா நகரம் தான் முன்னணியில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான சிறிய சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலைகளும், பெரிய நிறுவனங்களும் உள்ளன. இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த சைக்கிள்களில் 90 சதவீதம் லுõதியானாவை சேர்ந்தவை. இங்கு மட்டும் ஆண்டுக்கு 1.25 கோடி சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு மற்றும் சீன சைக்கிள்கள் இறக்குமதி ஆகிய பிரச்னைகளால், இந்திய சைக்கிகள் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று சமீபத்தில் தான் கோரிக்கை விடுத்தனர். இந்த சூழ்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், 130 பொருட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கலால் வரி விலக்கு சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் சைக்கிள்களும் அடங்கும். இதன் மூலம் ஒரு சதவீத வரிக்கு சைக்கிள்கள் ஆட்படுகின்றன. இந்த வரி விதிப்பினால், சைக்கிள்களின் விலையில், ரூ.50 முதல் ரூ.60 வரை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு, சைக்கிள் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஹீரோ சைக்கிள், அவான் சைக்கிள் உள்ளிட்ட சைக்கிள் உற்பத்தியாளர்கள், ஒன்றாக இணைந்து ஒரு நடவடிக்கை கமிட்டியை அமைத்துள்ளது. இந்த கமிட்டி, மத்திய அரசுக்கு சைக்கிள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. இல்லாவிடில், மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்றும் கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு இதேபோன்று சைக்கிள்களுக்கு கலால் வரி விதிக்கப்பட்டது. எனினும், கடுமையான எதிர்ப்பு காரணமாக, மூன்று மாதங்களில் வரி விதிப்பு வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|