பட்ஜெட் எதிரொலி: சைக்கிள் விலை உயர்கிறதுபட்ஜெட் எதிரொலி: சைக்கிள் விலை உயர்கிறது ... நாட்டின் உணவுப் பொருள்கள் பணவீக்கம் 9.52 சதவீதமாக குறைந்தது நாட்டின் உணவுப் பொருள்கள் பணவீக்கம் 9.52 சதவீதமாக குறைந்தது ...
பெட்ரோல் விலை இனி உயராது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2011
16:53

புதுடில்லி : பெட்ரோல் உள்ளிட்ட வாகன எரிபொருள்களின் விலை இனி உயராது என்ற அறிவிப்பு, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருப்பினும், இந்த நிலை தேர்தல் மு‌டியும் வரைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணத்தினால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை மாதத்திற்கு இருமுறை மாற்றம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மாதத்தின் முதல் மற்றும் 16ம் தேதி, எரிபொருள்களின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக, ஏற்றம் ‌மட்டுமே பெற்றுவந்த பெட்ரோல் விலை, தமிழகத்தில்‌, பெட்ரோல் விற்பனை வரி குறைக்கப்பட்டதன் விளைவாக, சமீபத்தில் லிட்டருக்கு, 1 ரூபாய் வரை குறைந்தது. கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை குறைவாக இருப்பதாகவும், இதனால், தங்களுக்கு பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 4 வீதமும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2 வீதம் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறிக்கொணடு, பெட்ரோல் விலையை உயர்த்தி வருகி்ன்றன. இந்நிலையில், தமிழ்நாடு,‌ கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் அசாமில் சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இந்நிலையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் வி‌லை உயர்த்தப்படும் பட்சத்தில், தங்களுக்கு பெரும்பாதகமாக அமைந்து தோல்வியை சந்திக்க நேரிடும் என்று ஆளுங்கட்சி நினைக்கிறது. எனவே. தேர்தல் முடியும்வரை , பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையை உயர்த்தக் கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு ரகசிய உத்தரவு விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)