பதிவு செய்த நாள்
19 மார்2011
16:41
பெங்களுரு: உற்பத்தி அளவை அதிகரிக்க ரூ.300 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா, இந்தியாவில் கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் டொயோட்டா வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவதையடுத்து, தேவையை நிறைவு செய்யும் வகையில், உற்பத்தி திறனை அதிகரிக்க டொயோட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்காக ரூ.300 கோடியை முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து டொயோட்டா கிர்லோஸ்கர் நி்ர்வாக இயக்குனர் கூறுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில், விற்பனை அளவு 31 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது; மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எட்டியோஸ் காருக்கும் அதிக அளவில் புக்கிங் செய்யப்பட்டுள்ளது. தேவையை நிறைவு செய்யும் விதத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது; பெங்களுருவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளிலும் ஆண்டுக்கு 2.1 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதற்கு எளிதாக ரூ.300 கோடியை முதலீடு செய்ய உள்ளதாகவும், இதன்மூலம் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக 60,000 கார்களை தயாரிக்க முடி்யும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|