பதிவு செய்த நாள்
20 மார்2011
01:00
சென்னை:ரஷ்ய நாட்டின் சிஸ்டீமா மற்றும் இந்தியாவின் ஷியாம் குழுமத்தின் கூட்டு நிறுவனமான சிஸ்டிமா ஷியாம் டெலிசர்வீசஸ், எம்.டி.எஸ். என்ற பெயரில், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் மொபைல் சேவை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.இந்தியாவில் தொலைத் தொடர்பு துறை அபரிமிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனம், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், தொலைத் தொடர்பு ÷ சவையில் களம் இறங்கியது.தற்போது, நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1கோடியை தாண்டியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளதை இந்த எண்ணிக்கை வெளிப்படுத்துகிறது.இதுதவிர, மொபைல்போன் வாயிலாக இண்டர்நெட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 5 லட்Œத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.இந்நிறுவனம், நாடு முழுவதும் 130 நகரங்களில், மொபைல்போன்சேவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|