பதிவு செய்த நாள்
20 மார்2011
01:01
புதுடில்லி:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மார்ச் 11ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 75.50 கோடி டாலர் (3,473 கோடி ரூபாய்) சரிவடைந்து, 30 ஆயிரத்து 183 கோடி டாலராக (13 லட்சத்து 88 ஆயிரத்து 418 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.இது, சென்ற மார்ச் 4ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்,180.70 கோடி டாலர் (8,312 கோடி ரூபாய்) அதிகரித்து, 30 ஆயிரத்து 259 கோடி டாலராக (13 லட்சத்து 91 ஆயிரத்து 928 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு 70.50 கோடி டாலர் (3,243 கோடி ரூபாய்) சரிவடைந்து, 27 ஆயிரத்து 226 கோடி டாலராக (12 லட்சத்து 52 ஆயிரத்து 396 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில், எந்த மாற்றமும் இல்லாமல், 2,214 கோடியே 30 லட்சம் டாலராக (1 லட்சத்து, ஆயிரத்து 858 கோடி ரூபாய்) உள்ளது.ரிசர்வ் வங்கி வைத்துள்ள எஸ்.டீ.ஆர். மதிப்பு 3.5 கோடி டாலர் (161 கோடி ரூபாய்) குறைந்து 516.90 கோடி டாலராக (23 ஆயிரத்து 777 கோடி ரூபாய்) இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|