ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில்:ஆயுள் காப்பீட்டு துறையின் பிரிமிய வருவாய் 24 சதவீதம் வளர்ச்சிஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில்:ஆயுள் காப்பீட்டு துறையின் ... ... விக்கிபீடியாவிற்கு நன்கொடை வழங்கிய நாடுகள்: 6வது இடத்தில் இந்தியா விக்கிபீடியாவிற்கு நன்கொடை வழங்கிய நாடுகள்: 6வது இடத்தில் இந்தியா ...
தொழில்துறையில் இந்தியா 11.5 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2011
08:53

ராமநாதபுரம்: ''உலக தொழில்முனைவோர் கண்காணிப்பு குழுவின் அறிக்கையின்படி, தொழில் வளர்ச்சியில் இந்தியா 11.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது,'' என அண்ணா பல்கலை துணை வேந்தர் முருகேசன் பேசினார். ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, அவர் பேசியதாவது: வாழ்க்கை கல்வியில், தோல்வியை கண்டு துவண்டுவிடக் கூடாது. நல்ல விசயங்களை எடுத்து கொள்ள வேண்டும். அது அனுபவத்தை கற்றுத்தரும். உலகளவில், இந்தியாவில் 17 சதவீத மக்கள் வளம் பெற்றுள்ளனர். ஆனால், அந்தளவு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் வளம்பெறவில்லை. காலம், திறமையை சரியாக பயன்படுத்தி, வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிக்கும் வகையில், தொழில் முனைவோர் அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப, தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் தரவேண்டும். 2009 உலக தொழில்முனைவோர் கண்காணிப்பு குழு அறிக்கையின்படி, இந்தியாவில் தொழில்முனைவோர் 11.5 , அமெரிக்கா 10.8 , ஜி.7 நாடுகள் ஆறு சதவீதமாகவும் உள்ளனர். இந்தியாவில், தமிழ்நாடு 10.6, மகாராஷ்டிரா 10.1, மேற்குவங்கம் 10.05, உத்தரபிரதேசம் 9.61, ஆந்திரா 9.56 சதவீதங்களில் தொழில்முனைவோர் வளர்ச்சி உள்ளது. இந்தியாவின் 50 சதவீத வளர்ச்சி, இந்த ஐந்து மாநிலங்களில் உள்ளன. அமெரிக்கா சிலிகான் பகுதியில் உள்ளதொழில் முனைவோரில் 35 சதவீதத்தினர் இந்தியர்கள். அதேபோல், இந்தியாவில் அதிகமானோர் தொழில் துவங்க முன் வர வேண்டும், என்றார். 262 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் தனசேகரன் வரவேற்றார். தாளாளர் பாபு அப்துல்லா, செயலாளர் சின்னத்துரை அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)