பதிவு செய்த நாள்
20 மார்2011
08:53
ராமநாதபுரம்: ''உலக தொழில்முனைவோர் கண்காணிப்பு குழுவின் அறிக்கையின்படி, தொழில் வளர்ச்சியில் இந்தியா 11.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது,'' என அண்ணா பல்கலை துணை வேந்தர் முருகேசன் பேசினார். ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி, அவர் பேசியதாவது: வாழ்க்கை கல்வியில், தோல்வியை கண்டு துவண்டுவிடக் கூடாது. நல்ல விசயங்களை எடுத்து கொள்ள வேண்டும். அது அனுபவத்தை கற்றுத்தரும். உலகளவில், இந்தியாவில் 17 சதவீத மக்கள் வளம் பெற்றுள்ளனர். ஆனால், அந்தளவு அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் வளம்பெறவில்லை. காலம், திறமையை சரியாக பயன்படுத்தி, வேலையில்லா திண்டாட்டம், வறுமையை ஒழிக்கும் வகையில், தொழில் முனைவோர் அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப, தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் தரவேண்டும். 2009 உலக தொழில்முனைவோர் கண்காணிப்பு குழு அறிக்கையின்படி, இந்தியாவில் தொழில்முனைவோர் 11.5 , அமெரிக்கா 10.8 , ஜி.7 நாடுகள் ஆறு சதவீதமாகவும் உள்ளனர். இந்தியாவில், தமிழ்நாடு 10.6, மகாராஷ்டிரா 10.1, மேற்குவங்கம் 10.05, உத்தரபிரதேசம் 9.61, ஆந்திரா 9.56 சதவீதங்களில் தொழில்முனைவோர் வளர்ச்சி உள்ளது. இந்தியாவின் 50 சதவீத வளர்ச்சி, இந்த ஐந்து மாநிலங்களில் உள்ளன. அமெரிக்கா சிலிகான் பகுதியில் உள்ளதொழில் முனைவோரில் 35 சதவீதத்தினர் இந்தியர்கள். அதேபோல், இந்தியாவில் அதிகமானோர் தொழில் துவங்க முன் வர வேண்டும், என்றார். 262 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் தனசேகரன் வரவேற்றார். தாளாளர் பாபு அப்துல்லா, செயலாளர் சின்னத்துரை அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|