பதிவு செய்த நாள்
28 மார்2011
00:11
மும்பை: சர்வதேச அளவிலான முதல் 50 நிறுவனங்களின் பட்டியலில், முதன் முறையாக இந்தியாவை சேர்ந்த டாட்டா நிறுவனம் இடம் பெற்றுள்ளது என, பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிறுவனங்களான, டாட்டா மோட்டார்ஸ் குழுமம், டாட்டா ஸ்டீல் குழுமம் மற்றும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் டாட்டா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், 2007ம் ஆண்டு, இப்பட்டியலில் 103வது இடத்தை பிடித்திருந்தது. அதன் பின்னர், இந்நிறுவனம் படிப்படியாக வளர்ச்சியடைந்து, சர்வதேச அளவிலான நிறுவனங்களின் பட்டியலில் 50வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது டாட்டா குழுமம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், உலோகம், சேவை, மின்சாரம், நுகர்பொருள்கள் மற்றும் ரசாயனம் போன்ற துறைகளில் ஈடுபடுகிறது. ஆறு கண்டங்களிலும், 80 நாடுகளுக்கு மேல் வணிகத் தொடர்பை கொண்டுள்ள இந்நிறுவனம், 85 உலக நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது.சென்ற 2009-10ம் ஆண்டில், டாட்டா நிறுவனத்தின் மொத்த வருவாய் 6.74 கோடி டாலராக (31ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது. இதில், 57 சதவீத வருவாய், இந்தியாவிற்கு வெளியில் மேற்கொண்ட வர்த்தகத்தின் மூலம் கிடைக்க பெற்றதாகும். உலகளவில் இந்நிறுவனத்தில், 3 லட்சத்து 95 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிறுவனம், 9.71 கோடி டாலர் பங்கு மூலதனத்தையும், 35 லட்சம் பங்குதாரர்களையும் கொண்டுள்ளது. இக்குழுமத்தில், டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், டாட்டா பவர், டாட்டா ஸ்டீல், டாட்டா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|