மொபைல் போன்களின் விலையை உயர்த்துகிறது சாம்சங்மொபைல் போன்களின் விலையை உயர்த்துகிறது சாம்சங் ... நிலுவை தொகை ரூ.2,400 கோடியாக அதிகரிப்பு ஏர் இந்தியாவுக்கு எரிபொருளை நிறுத்த திட்டம் நிலுவை தொகை ரூ.2,400 கோடியாக அதிகரிப்பு ஏர் இந்தியாவுக்கு எரிபொருளை நிறுத்த ... ...
டாட்டா நிறுவனம் 50 சர்வதேச முன்னணி நிறுவனங்களில் இடம்பெற்றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2011
00:11

மும்பை: சர்வதேச அளவிலான முதல் 50 நிறுவனங்களின் பட்டியலில், முதன் முறையாக இந்தியாவை சேர்ந்த டாட்டா நிறுவனம் இடம் பெற்றுள்ளது என, பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நிறுவனங்களான, டாட்டா மோட்டார்ஸ் குழுமம், டாட்டா ஸ்டீல் குழுமம் மற்றும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் டாட்டா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், 2007ம் ஆண்டு, இப்பட்டியலில் 103வது இடத்தை பிடித்திருந்தது. அதன் பின்னர், இந்நிறுவனம் படிப்படியாக வளர்ச்சியடைந்து, சர்வதேச அளவிலான நிறுவனங்களின் பட்டியலில் 50வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது டாட்டா குழுமம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், உலோகம், சேவை, மின்சாரம், நுகர்பொருள்கள் மற்றும் ரசாயனம் போன்ற துறைகளில் ஈடுபடுகிறது. ஆறு கண்டங்களிலும், 80 நாடுகளுக்கு மேல் வணிகத் தொடர்பை கொண்டுள்ள இந்நிறுவனம், 85 உலக நாடுகளுக்கு அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது.சென்ற 2009-10ம் ஆண்டில், டாட்டா நிறுவனத்தின் மொத்த வருவாய் 6.74 கோடி டாலராக (31ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது. இதில், 57 சதவீத வருவாய், இந்தியாவிற்கு வெளியில் மேற்கொண்ட வர்த்தகத்தின் மூலம் கிடைக்க பெற்றதாகும். உலகளவில் இந்நிறுவனத்தில், 3 லட்சத்து 95 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிறுவனம், 9.71 கோடி டாலர் பங்கு மூலதனத்தையும், 35 லட்சம் பங்குதாரர்களையும் கொண்டுள்ளது. இக்குழுமத்தில், டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், டாட்டா பவர், டாட்டா ஸ்டீல், டாட்டா கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)