இந்திய வேலைவாய்ப்பு சந்தைவேலை மாறுதலால் பாதிப்புஇந்திய வேலைவாய்ப்பு சந்தைவேலை மாறுதலால் பாதிப்பு ... சென்ற பிப்ரவரி மாதத்தில்ஆறு முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8 சதவீதம் வளர்ச்சி சென்ற பிப்ரவரி மாதத்தில்ஆறு முக்கிய துறைகளின் உற்பத்தி 6.8 சதவீதம் ... ...
காளையின் ஆதிக்கம் தொடர்கிறது...பீ.எஸ்.இ.'சென்செக்ஸ்' 178 புள்ளிகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2011
02:52

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய் கிழமையன்றும் நன்கு இருந்தது. அன்னிய நிதி நிறுவனங்கள் மீண்டும், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருவதால், தொடர்ந்து ஆறு வர்த்தக தினங்களாக, பங்கு வியாபாரம் காளையின் ஆதிக்கத்தில் உள்ளது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் சற்று மந்தமாக இருந்தது.செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.ஹீரோ ஹோண்டா குழுமத்தில், 4,500 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளும் வகையில், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, அன்னிய நேரடி முதலீட்டு திட்டத்தின் கீழ், மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் பங்கின் விலை, செவ்வாய்க் கிழமை அன்று 3.02 சதவீதம் உயர்ந்து, 1,546.35 ரூபாய்க்கு கைமாறியது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 177.66 புள்ளிகள் அதிகரித்து, 19,120.80 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்கத்தின் இடையே அதிகபட்சமாக 19,226.21 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,944.82 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 28 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும், இரண்டு நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 'நிப்டி' 49.10 புள்ளிகள் உயர்ந்து, 5,736.35 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,770.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,680.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)