பதிவு செய்த நாள்
02 ஏப்2011
11:15
புதுடில்லி : இந்தாண்டின் பிப்ரவரி மாதத்தில் அப்பாரெல்கள் என்றழைக்கப்படும் கார்மெண்ட்ஸ் (ஆயத்த ஆடைகள்) ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரித்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவை எட்டியுள்ளதாக கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பத்திரிகையாளர்களை சந்தித்த அப்பாரேல் எக்ஸ்போர்ட் புரோமோசன் கவுன்சில் தலைவர் பிரேமல் உடானி தெரிவித்துள்ளதாவது, 2011ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில், நாட்டின் கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி 24 சதவீதம் அதிகரித்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகி உள்ளது. 2009-10ம் நிதியாண்டில், ஏற்றுமதி 938 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில், இந்திய தயாரிப்புகளுக்கு ஏற்பட்ட தேவையை இந்த ஏற்றுமதி அதிகரிப்பிற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|