பதிவு செய்த நாள்
03 ஏப்2011
06:24
புதுடில்லி:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மார்ச் 25ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 2.4 கோடி டாலர் (110.40 கோடி ரூபாய்) சரிவடைந்து, 30 ஆயிரத்து 348 கோடி டாலராக (13 லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, சென்ற மார்ச் 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 167 கோடி டாலர் (7,682 கோடி ரூபாய்) உயர்ந்து, 30 ஆயிரத்து 351 கோடி டாலராக (13 லட்சத்து 96 ஆயிரத்து 146 கோடி ரூபாய்) அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.இதே வாரத்தில், அன்னியச் செலாவணியின் மதிப்பு 2.9 கோடி டாலர் (133.4 கோடி ரூபாய்) சரிந்து, 27 ஆயிரத்து 370 கோடி டாலராக (12 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், 2,214 கோடி டாலராக (10 லட்சத்து, ஆயிரத்து 844 கோடி ரூபாய்) உள்ளது. சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணியின் வெளி மதிப்பு சரிவடைந்ததைத் தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|