பதிவு செய்த நாள்
03 ஏப்2011
10:41
மதுரை:மதுரையில் கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகை 60 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த மாதம் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வந்த போதிலும், மல்லிகை வரத்து அதிகம் இருந்ததால், விலை கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த வாரம் வரை கிலோ 60 ரூபாய் என்ற நிலையில் தான் மல்லிகை விற்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 25,26ல் பெய்த தொடர் மழையால் உற்பத்தி குறைந்தது. தற்போது முகூர்த்த நாட்கள் இல்லாதபோதும், மல்லிகை விலை 6 மடங்காக அதிகரித்து, நேற்று 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது வியாபாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் சங்க நிர்வாகி சோ.ராமச்சந்திரன் கூறுகையில், ''இரண்டு நாள் மழையால், தற்போது மல்லிகை உற்பத்தி பாதிக்கப்பட்டு இந்த விலையில் விற்கப்படுகிறது. தொடர்ந்து விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|