தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள்25 சதவீதம் பேரிடம் தான் வேலைத்திறன் உள்ளது:'நாஸ்காம்' அமைப்பு  தகவல்தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள்25 சதவீதம் பேரிடம் தான் வேலைத்திறன் ... ... உற்பத்தி குறைவால் தேயிலை விலை அதிகரிப்பு உற்பத்தி குறைவால் தேயிலை விலை அதிகரிப்பு ...
ஓ.என்.ஜி.சி. நிறுவனம்எரிவாயு உற்பத்தியை தனியாரிடம் வழங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2011
04:57

ஐதராபாத்:பொதுத் துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம், நாட்டில் எரிவாயு உற்பத்தி மற்றும் துரப்பண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி படுகையில், மேற்கொண்டு வரும் எரிவாயு உற்பத்தி பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.இது குறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'கிருஷ்ணா - கோதாவரி படுகையில், 40 எண்ணெய் கிணறுகளில் குறிப்பிட்ட அளவை விட எரிவாயுவின் அழுத்தம் குறைந்து போயுள்ளது. இந்த கிணறுகளில் இருந்து எரிவாயு உற்பத்தியை மேற்கொள்வது பொருளாதார ரீதியில் சரியாக இருக்காது என நிறுவனம் கருதுகிறது.இதனால், இந்த கிணறுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் எரிவாயுவை உற்பத்தி செய்து பெற்றுக் கொள்ள, ஓ.என்.ஜி.சி. முடிவு செய்துள்ளது. இதன்படி, கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாயுடன் இணைப்பதற்கு அவசியமான, 700 பி.எஸ்.ஐ.க்கும் குறைவான அழுத்தம் கொண்ட எரிவாயுவை உற்பத்தி செய்யும் பணி, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த நிறுவனங்கள், எண்ணெய் கிணறுகளை பொறுத்து, 40 முதல் 60 சதவீதம் வரையிலான எரிவாயுவை உற்பத்தி செய்து நிறுவனத்திற்கு வழங்கும்' என்றார்.இந்த எண்ணெய் கிணறுகள் மூலம், அடுத்த இரு ஆண்டுகள் முதல், 5 ஆண்டுகள் வரையில், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)