பதிவு செய்த நாள்
10 ஏப்2011
04:57
ஐதராபாத்:பொதுத் துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம், நாட்டில் எரிவாயு உற்பத்தி மற்றும் துரப்பண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கிருஷ்ணா - கோதாவரி படுகையில், மேற்கொண்டு வரும் எரிவாயு உற்பத்தி பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.இது குறித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'கிருஷ்ணா - கோதாவரி படுகையில், 40 எண்ணெய் கிணறுகளில் குறிப்பிட்ட அளவை விட எரிவாயுவின் அழுத்தம் குறைந்து போயுள்ளது. இந்த கிணறுகளில் இருந்து எரிவாயு உற்பத்தியை மேற்கொள்வது பொருளாதார ரீதியில் சரியாக இருக்காது என நிறுவனம் கருதுகிறது.இதனால், இந்த கிணறுகளில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலம் எரிவாயுவை உற்பத்தி செய்து பெற்றுக் கொள்ள, ஓ.என்.ஜி.சி. முடிவு செய்துள்ளது. இதன்படி, கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாயுடன் இணைப்பதற்கு அவசியமான, 700 பி.எஸ்.ஐ.க்கும் குறைவான அழுத்தம் கொண்ட எரிவாயுவை உற்பத்தி செய்யும் பணி, தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். அந்த நிறுவனங்கள், எண்ணெய் கிணறுகளை பொறுத்து, 40 முதல் 60 சதவீதம் வரையிலான எரிவாயுவை உற்பத்தி செய்து நிறுவனத்திற்கு வழங்கும்' என்றார்.இந்த எண்ணெய் கிணறுகள் மூலம், அடுத்த இரு ஆண்டுகள் முதல், 5 ஆண்டுகள் வரையில், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|