பதிவு செய்த நாள்
10 ஏப்2011
14:11
புதுடில்லி : நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 5 அணிகளுக்கு ரூ.610 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் தர உள்ளதாக ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் தனிப்பட்ட விபத்து, மருத்துவ செலவு, பொருட்கள் தவறுதல் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாகும். மிக அதிகபட்சமாக கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு ரூ.160 கோடி இன்சூரன்ஸ் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்க ரூ.136 கோடி இன்சூரன்ஸ் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. சகாரா இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான புனே வாரியர்ஸ் அணிக்கு ரூ.122.4 கோடி இன்சூரன்சாக வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.93.7 கோடியும், டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்கு ரூ.98 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. புனே அணியின் கேப்டன் யுவராஜ் சிங்கிற்கு தனிநபர் இன்சூரன்சாக ரூ.24.7 கோடியும், சக வீரரான ராபின் உத்தப்பாவிற்கு ரூ.28.8 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|