பதிவு செய்த நாள்
11 ஏப்2011
00:16
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் கடலை எண்ணெய் விலை டின்னுக்கு 30 ரூபாயும், நிலக்கடலை பருப்பு மூட்டைக்கு 300 ரூபாயும் உயர்ந்துள்ளது. விருதுநகரில் சர்க்கரை விலை மூட்டைக்கு 2,795 ரூபாயாக உள்ளது. கடலை எண்ணெய் டின்னுக்கு 1,200 ரூபாயில் இருந்து 1,230 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 1,120 ரூபாயாகவும், பாமாயில் 900 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. நிலக்கடலை பருப்பு 3,600 ரூபாயில் இருந்து 3,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலைப் புண்ணாக்கு மூட்டை 2,600 ரூபாயில் இருந்து 2,700 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடலை பருப்பு வரத்து குறைந்ததால் நிலக்கடலை பருப்பும், கடலை எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.பருப்பு: உளுந்து விலை மூட்டைக்கு 4,900 ரூபாயில் இருந்து, 5,200 ரூபாயாக உள்ளது. இரண்டாவது ரகம் 4,100 ரூபாயில் இருந்து 4,200 ரூபாய் வரையும், பர்மா பருவட்டு 5,200 ரூபாயாகவும் உள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6,800 ரூபாயாகவும், பர்மா பருவட்டு 5,250 ரூபாயாகவும் உள்ளது. துவரை 4,400 ரூபாயில் இருந்து 4,800 ரூபாயாகவும், பொடி துவரை 3,800 ரூபாயாகவும், துவரம் பருப்பு 6,000 ரூபாயில் இருந்து 6,200 ரூபாயாகவும் உள்ளது. பொடி துவரம் பருப்பு 4,800 ரூபாயாகவும், பாசிப்பயறு 4,400 ரூபாயில் இருந்து 4,300 ரூபாயாகவும், லயன் பருவட்டு 4,900 ரூபாயாகவும், இரண் டாவது ரகம் 3,700 ரூபாயாகவும் உள்ளது. பாசிப் பருப்பு 6,200 ரூபாயாகவும், ரகம் 5,600 ரூபாயில் இருந்து 5,900 ரூபாயாகவும் உள்ளது. பருப்பு மார்க்கெட்டில் பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். மைதா 2,180 ரூபாயாகவும், ரவை 2,260 ரூபாயாகவும், கொண்டைக்கடலை 2,700 ரூபாயாகவும், பொரிகடலை 2,050 ரூபாயாகவும் உள்ளது.வத்தல்: புது வத்தல் மூட்டை 7,500 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாகவும், முண்டுவத்தல் 7,000 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாகவும், சோடை வத்தல் 3,000 ரூபாயாகவும், பழைய சோடை வத்தல் 2,500 ரூபாயாகவும் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|