பதிவு செய்த நாள்
27 ஏப்2011
12:56
மும்பை : லோ காஸ்ட் ஏர்லைன்ஸ் என்று சொல்லிக்கொள்ளும் தனியார் விமான நிறுவனங்கள் எல்லாம், ஏர் இந்தியா விமான ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அதிரடியாக கட்டணத்தை உயர்த்தியுள்ளன. ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு விமான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன. மும்பை - டில்லி மார்க்கமாக செல்லும் இண்டிகோ விமான நிலையத்தில் ரூ. 5,784 ஆக இருந்த விமான கட்டணம், ரூ. 6,234 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், முன்னணி நிறுவனங்களான கிங்பிஷர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. கிங்பிஷர் நிறுவனம், மும்பை-டில்லி மார்க்கமாக செல்லும் விமானத்தின் சாதாரண கட்டணம் ரூ. 6,785 லிருந்து ரூ. 8,798 ஆக உயர்த்தியுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் 800 பைலட்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைநிறுத்தத்தின் மூலம், 20க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|