பதிவு செய்த நாள்
02 மே2011
14:37
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாருதி சுசூகி இந்தியா (எம்எஸ்ஐ) நிறுவனம் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏப்ரல் மாதத்தில், தங்கள் நிறுவனம் 97,155 கார்களை விற்பனை செய்துள்ளது. 2010ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 93,058 கார்களே விற்பனை ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சதவீதத்தின் அடிப்படையில், இது 4 சதவீதம் ஆகும். அதேபோல், தலைநகர் டில்லியில், விற்பனை 8.88 சதவீதம் அதிகரித்து 87,144 (கடந்தாண்டில் 80,034) என்ற அளவில் உள்ளது. விற்பனை அதிகரித்துள்ள போதிலும், ஏற்றுமதி 23.13 சதவீதம் குறைந்துள்ளது. இந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், நிறுவன ஏற்றுமதி 10,011 என்ற அளவில் உள்ளது. கடந்தாண்டின் ஏப்ரல் மாதத்தில், 13,024 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|