காபி ஏற்றுமதி 50 சதவீதம் வளர்ச்சிகாபி ஏற்றுமதி 50 சதவீதம் வளர்ச்சி ... மத்திய அரசின் கொள்கையால் வெங்காயம் ஏற்றுமதி பாதிப்பு மத்திய அரசின் கொள்கையால் வெங்காயம் ஏற்றுமதி பாதிப்பு ...
பங்குச் சந்தை நிலவரம்'சென்செக்ஸ்' மேலும் 65 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மே
2011
05:07

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து எட்டாவது வர்த்தக தினமாக, புதன்கிழமையன்றும் மிகவும் மந்தமாக இருந்தது. வங்கிகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, நிறுவனங்களின் வட்டிச் செலவினம் அதிகரித்து, அவற்றின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்ற மதிப்பீட்டால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் குறைந்திருந்தது.ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் விலக்கி கொள்ளப்படலாம் என்ற செய்தியால், மோட்டார் வாகனத் துறை நிறுவனப் பங்குகளின் விலையும் சரிவடைந்திருந்தது. இதுதவிர, உலோகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், எண்ணெய், எரிவாயு, நுகர்பொருள்கள், வங்கி, பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவைப்பாடு காணப்பட்டது.மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 65.33 புள்ளிகள் சரிவடைந்து, 18,469.36 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 18,604.36 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,339.53 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 28.10 புள்ளிகள் குறைந்து, 5,537.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 5,578.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,503 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)