பதிவு செய்த நாள்
07 மே2011
00:13
சென்னை :கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபடும் லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம், 'வெர்டிகா' என்ற பெயரில், சொகுசு வகை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை, சென்னையில் அமைக்க உள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.உதயகுமார் கூறியதாவது:சென்னை நகரத்தில், சொகுசு வகை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, நிறுவனம் பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.தற்போது, சென்னை - கோபால புரத்தில், 21.5 கிரவுண்டு நிலப்பரப்பில், 261 கோடி ரூபாய் திட்ட செலவில், 17 மாடிகள் கொண்ட சொகுசு வகை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை அமைக்க உள்ளோம். உயர் வருவாய்பிரிவினருக்கான இந்த அடுக்குமாடி குடியிருப்பு நீச்சல் குளம், உடல் புத்துணர்வு @சவை மையம், சிறிய திரையரங்கம், கேளிக்கை விடுதி, பன்னடுக்கு கார் நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும்.இவ்வகை வீடுகளின் விலை, மூன்று கோடியே 61 லட்சம் ரூபாய்முதல் ஆறு கோடியே 25 லட்சம் ரூபாய்வரை இருக்கும். சென்ற நிதியாண்டில் நிறுவனத்தின் விற்று முதல், 95 கோடி ரூபாயாக இருந்தது. இதை நடப்பு நிதியாண்டில், 250 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உதயகுமார் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|