பங்குச் சந்தை பட்டியலில் முத்தூட் பைனான்ஸ்பங்குச் சந்தை பட்டியலில் முத்தூட் பைனான்ஸ் ... வரத்து அதிகரிப்பால் சர்க்கரை விலை சரிவு வரத்து அதிகரிப்பால் சர்க்கரை விலை சரிவு ...
முருகப்பா குழுமம் ரூ.1,500 கோடியில் விரிவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2011
00:17

சென்னை: சென்னையில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும் முருகப்பா குழுமம், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 1,500 கோடி ரூபாயில் விரிவாக்க திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. இதுகுறித்து, இக்குழுமத்தின் செயல் தலைவர் ஏ. வெள்ளையன் கூறியதாவது: குழுமத்தைச்சேர்ந்த கோரமண்டல் இன்டர்நேஷனல், டியூப் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் கார்போரண்டம் யூனிவர்சல் ஆகிய மூன்று நிறுவனங்களில், அதிகளவில் முதலீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டில்,குழுமத்தின் விற்று முதல், 25 சதவீதம் அதிகரித்து, 17 ஆயிரத்து 51 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, சென்ற நிதியாண்டில் 13 ஆயிரத்து 617 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில் நிறுவனத்தின், வரிக்கு முந்தைய லாபம், 20 சதவீதம் அதிகரித்து, 2,247 கோடி ரூபாயாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 1,879 கோடி ரூபாயாக இருந்தது. அதேசமயம், இக்குழுமத்தின் வரிக்கு முந்தைய லாபம், 20 சதவீதம் அதிகரித்து , 1,657 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இக்குழும நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, கடந்த ஓராண்டு காலத்தில், 11 ஆயிரத்து 193 கோடி ரூபாயிலிருந்து, 19 ஆயிரத்து 194 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், வரும் 2013-14ம் நிதியாண்டிற்குள் குழுமத்தின் விற்று முதலை 33 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம். நடப்பு நிதியாண்டில் 25-30 சதவீதம் வரை, வளர்ச்சி காண முனைந்துள்ளோம்.குழுமத்தின் துணை நிறுவனமான, சோழ மண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்டு பைனான்ஸ் வாயிலாக, தங்க நகைக் கடன் வர்த்தகத்தை தொடங்க உள்ளோம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, நாடு முழுவதும் தங்க நகை கடன் திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு வெள்ளையன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)