பதிவு செய்த நாள்
07 மே2011
00:18
சேலம்: வடமாநிலத்தில் இருந்து சர்க்கரை வரத்து அதிகரித்துள்ளதால், கிலோவுக்கு, 4 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி, 2006-07 ம் ஆண்டில், 27 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. இது, 2007-08 ம் ஆண்டு, 16 லட்சம் டன்னாக குறைந்து, 2009ம் ஆண்டு, 14 லட்சம் டன் என்ற அளவில் சரிந்தது. இதற்கு @நர்மாறாக, சர்க்கரை பயன்பாடு அதிகரித்து, விலையும் உயர்ந்து கொண்டே வந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரு கிலோச ர்க்கரை 15 ரூபாயாக இருந்தது. இது, சில மாதங்களுக்கு முன்பாக, 40 ரூபாயாக உயர்ந் தது. சர்க்கரை உற்பத்தியில், 20 சதவீதம் வீட்டு பயன்பாட்டிற்கும், 55 சதவீதம் இனிப்பு பலகாரங்களுக்கும், 15 சதவீதம் சாக்லெட் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், தற்போது சர்க்கரையின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில், ஒரு கிலோ சர்க்கரை 34 முதல், 38 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, கி@லாவிற்கு 4 ரூபாய் வரை விலை குறைந்து, 30 முதல், 34 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் இருந்து, அதிக அளவு சர்க்கரை தமிழகத்துக்கு வந்துள்ளது தான், விலைச்சரிவுக்கு காரணம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|