பதிவு செய்த நாள்
12 மே2011
03:02
மும்பை:ஐ.டீ.பீ.ஐ. வங்கி, 'விகாஸ் யாத்ரா' என்ற பெயரில், நடமாடும் புதிய வங்கிச் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதை, வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.மல்லா, கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஐ.டீ.பீ.ஐ. வங்கி, மக்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வங்கிச் சேவையை அளிக்கும் வகையில், ஏ.டி.எம். சாதனம் பொருத்தப்பட்ட பஸ் ஒன்றை வடிவமைத்து, வங்கிச் சேவைக்கு அர்ப்பணித்துள்ளது.இதுகுறித்து மல்லா கூறுகையில், 'வங்கியின் இந்த புதிய நடமாடும் வங்கிச் சேவையின் மூலம், பல்லாயி ரக்கணக்கான மக்கள் பயனடைவர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, புதிய வடிவமைப்புடன் கூடிய இந்த பஸ், வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சேவைகளை வழங்கும். ஐ.டீ.பீ.ஐ. வங்கி, நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், பல்வேறு வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|