பதிவு செய்த நாள்
12 மே2011
03:05
புதுடில்லி:மூலப் பொருள்களை இறக்குமதி செய்து, அதன் மூலம் தயாரிக்கப்படும் பொருள்களை ஏற்றுமதி செய் பவர்களுக்கு,சுங்கவரிச் சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை, வரும் ஜூன் மாதம் ரத்தாக உள்ளது. இத னால், நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி, 9 லட்சத்து 20 ஆயிரம்கோடி ரூபாயாக குறையும் என, இந்திய ஏற்றுமதி யாளர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.இதுகுறித்து இக்கூட்டமைப்பின் தலைவர் ராமு தி@யாரா கூறியதாவது:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதியை, 14 லட்சத்து 35 ஆயிரம்கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு டீ.ஈ.பி.பீ., திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ”ங்க வரி ச் சலுகை, வரும் ஜூன் மாதத்துடன் ரத்தாக உள்ளது.பொருள்கள் மற்றும்சேவை வரி என்ற திட்டத்தை, நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு அறிமுகப்படுத்துவதாக இருந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த புதிய வரி திட்டம், அடுத்த நிதியாண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், டீ.ஈ.பி.பீ., திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும். இல்லையென்றால், நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி, 9 லட்சத்து 20 ஆயிரம்÷ காடி ரூபாயாக குறைந்து விடும். இதுகுறித்து மத்திய அரசு, உடனடியாக தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும். இல்லையென்றால், ஏற்றுமதிக்கான ஆர்டர்களை இழக்கநேரிடும். இவ்வாறு ராமு தி@யாரா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|