பதிவு செய்த நாள்
20 மே2011
00:01
சென்னை :மார்க் குழுமத்தின் ஓர் அங்கமான, மார்க் பிராப்பர்டைஸ் நிறுவனம், பழைய மகாபலிபுரம் சாலையில், காரப்பாக்கத்தில், 'கல்ப விருக்ஷா' என்ற பெயரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.இதுகுறித்து மார்க் பிராப்பர்டைஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன், 'தினமலர்' இதழுக்கு அளித்த விவரங்கள் வருமாறு:நிறுவனம், காரப்பாக்கத்தில் 1.20 ஏக்கரில், 70 குடியிருப்புகளை உள்ளடக்கிய அடுக்குமாடி திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட இந்த குடியிருப்புகள், 880 சதுர அடி முதல் 1,502 சதுர அடி பரப்பளவில் இருக்கும்.பழைய மகாபலிபுரம் சாலையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அத்துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இச்சாலை அருகே அமைந்துள்ள நிறுவனங்களில், தற்போது 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2.50 லட்சமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.'டைடல் பார்க்'கிலிருந்து 8 கி.மீ., தொலையில், இந்த, 'கல்ப விருக்ஷா' குடியிருப்பு திட்டம் அமைக்கப்படவுள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தில், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும், நல்ல வெளிச்சத்துடன், காற்றோட்ட வசதிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளன.கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ள இத்திட்டம், 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும். 30 கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன் விலை, சதுர அடி 4,500 ரூபாய் என்றளவில் இருக்கும். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|