நோக்கியா - ஏர்செல் '3ஜி' சேவையில் கூட்டுத் திட்டம்நோக்கியா - ஏர்செல் '3ஜி' சேவையில் கூட்டுத் திட்டம் ... வங்கிகள் வழங்கிய கடன்கள் 22.6  சதவீதம் உயர்வு வங்கிகள் வழங்கிய கடன்கள் 22.6 சதவீதம் உயர்வு ...
மார்க் பிராப்பர்டைஸ் காரப்பாக்கத்தில் புதிய குடியிருப்புகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2011
00:01

சென்னை :மார்க் குழுமத்தின் ஓர் அங்கமான, மார்க் பிராப்பர்டைஸ் நிறுவனம், பழைய மகாபலிபுரம் சாலையில், காரப்பாக்கத்தில், 'கல்ப விருக்ஷா' என்ற பெயரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.இதுகுறித்து மார்க் பிராப்பர்டைஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எஸ்.ராமகிருஷ்ணன், 'தினமலர்' இதழுக்கு அளித்த விவரங்கள் வருமாறு:நிறுவனம், காரப்பாக்கத்தில் 1.20 ஏக்கரில், 70 குடியிருப்புகளை உள்ளடக்கிய அடுக்குமாடி திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட இந்த குடியிருப்புகள், 880 சதுர அடி முதல் 1,502 சதுர அடி பரப்பளவில் இருக்கும்.பழைய மகாபலிபுரம் சாலையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அத்துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இச்சாலை அருகே அமைந்துள்ள நிறுவனங்களில், தற்போது 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2.50 லட்சமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.'டைடல் பார்க்'கிலிருந்து 8 கி.மீ., தொலையில், இந்த, 'கல்ப விருக்ஷா' குடியிருப்பு திட்டம் அமைக்கப்படவுள்ளது. இக்குடியிருப்பு வளாகத்தில், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பும், நல்ல வெளிச்சத்துடன், காற்றோட்ட வசதிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளன.கூடிய விரைவில் தொடங்கப்படவுள்ள இத்திட்டம், 18 மாதங்களுக்குள் முடிக்கப்படும். 30 கோடி ரூபாய் செலவில், இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன் விலை, சதுர அடி 4,500 ரூபாய் என்றளவில் இருக்கும். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)