மார்க் பிராப்பர்டைஸ் காரப்பாக்கத்தில் புதிய குடியிருப்புகள்மார்க் பிராப்பர்டைஸ் காரப்பாக்கத்தில் புதிய குடியிருப்புகள் ... உணவு பொருள் பணவீக்கம் 7.47சதவீதமாக குறைந்தது உணவு பொருள் பணவீக்கம் 7.47சதவீதமாக குறைந்தது ...
வங்கிகள் வழங்கிய கடன்கள் 22.6 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2011
00:02

மும்பை: நடப்பு மே மாதம் 6ம் தேதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலத்தில், இந்திய வங்கிகள் வழங்கிய கடன்கள், 40 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது, நாட்டின் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, நாட்டில் உள்ள வங்கிகள் வழங்கிய மொத்த கடன்கள், 40 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு, மே 6ம் தேதி வரையிலான ஓராண்டு காலத்தில், 33 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. வங்கிகள் வழங்கிய கடன்கள், 22.6 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.இதே ஆண்டுகளில், மே 7ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகள் திரட்டிய டிபாசிட்டு, 46 லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 54 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, ஆண்டின் அடிப்படையில் ஒப்பிடும் போது, 16.6 சதவீதம் அதிகம். நடப்பு 2011-12ம் ஆண்டு, நிதி கொள்கையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமடைந்து வருவதால், வங்கி வழங்கும் கடன்களின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது என, ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வட்டி விகித உயர்வின் தாக்கத்தைசமாளிக்கக் கூடிய அளவிற்கு, கடன்களுக்கான தேவை அதிகரிக்கும் என, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 2010-11ம் நிதியாண்டில், வங்கிகள் வழங்கிய கடன்கள், 21.5 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், வங்கிகள் திரட்டிய டிபாசிட்டு 15.5 சதவீத அளவிற்கே வளர்ச்சியடைந்துள்ளது.நாட்டின் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தியது. இதன் தொடர்ச்சியாக, வங்கிகள், வீட்டுக்கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)