வங்கிகள் வழங்கிய கடன்கள் 22.6  சதவீதம் உயர்வுவங்கிகள் வழங்கிய கடன்கள் 22.6 சதவீதம் உயர்வு ... சுகுணா சிக்கன் நிறுவனத்துக்கு விருது சுகுணா சிக்கன் நிறுவனத்துக்கு விருது ...
உணவு பொருள் பணவீக்கம் 7.47சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2011
00:03

புதுடில்லி: நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், மே 7ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.47சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 7.70சதவீதமாக இருந்தது. மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் மதிப்பிடப்படும் உணவுப் பொருள் பணவீக்கம், தொடர்ந்து மூன்று வாரங்களாக குறைந்துள்ளது. பருப்பு வகைகள், காய்கறிகள், கோதுமை உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ளதையடுத்து, இப்பணவீக்கம்சரிவடைந்துள்ளது. உணவுப்பொருள் பணவீக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட, 18 மாதங்களுக்கு பிறகு, தற்போது மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும், கணக்கீடு செய்து கொள்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், பருப்பு வகைகள் விலை, சென்றாண்டின் இதே வாரத்தை விட, 8.87 சதவீதம் குறைந்திருந்தது. காய்கறிகள் 3.6 சதவீதமும், கோதுமை விலை, 0.06 சதவீதமும் குறைந்திருந்தது.உணவுப் பொருள்கள் அல்லாத பிரிவில், நூலிழை விலை 62 சதவீதம் உயர்ந்திருந்தது. தாதுப்பொருள்கள் விலை 11.95 சதவீதமும், எரிபொருள் மற்றும் மின்சாரம் 12.11 சதவீதமும் உயர்ந்திருந்தது.நாட்டின் பொது பணவீக்க விகிதம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 8.66 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில், 9 சதவீதத்திற்கு அதிகமாகவும் இருந்தது.பொது பணவீக்கம் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை இம்மாத தொடக்கத்தில் 0.50 சதவீதம் உயர்த்தியது.கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ஒன்பது முறை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)