பதிவு செய்த நாள்
20 மே2011
00:03
புதுடில்லி: நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், மே 7ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.47சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 7.70சதவீதமாக இருந்தது. மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் மதிப்பிடப்படும் உணவுப் பொருள் பணவீக்கம், தொடர்ந்து மூன்று வாரங்களாக குறைந்துள்ளது. பருப்பு வகைகள், காய்கறிகள், கோதுமை உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ளதையடுத்து, இப்பணவீக்கம்சரிவடைந்துள்ளது. உணவுப்பொருள் பணவீக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட, 18 மாதங்களுக்கு பிறகு, தற்போது மிகவும் குறைந்துள்ளது. இருப்பினும், கணக்கீடு செய்து கொள்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், பருப்பு வகைகள் விலை, சென்றாண்டின் இதே வாரத்தை விட, 8.87 சதவீதம் குறைந்திருந்தது. காய்கறிகள் 3.6 சதவீதமும், கோதுமை விலை, 0.06 சதவீதமும் குறைந்திருந்தது.உணவுப் பொருள்கள் அல்லாத பிரிவில், நூலிழை விலை 62 சதவீதம் உயர்ந்திருந்தது. தாதுப்பொருள்கள் விலை 11.95 சதவீதமும், எரிபொருள் மற்றும் மின்சாரம் 12.11 சதவீதமும் உயர்ந்திருந்தது.நாட்டின் பொது பணவீக்க விகிதம், சென்ற ஏப்ரல் மாதத்தில், 8.66 சதவீதமாகவும், மார்ச் மாதத்தில், 9 சதவீதத்திற்கு அதிகமாகவும் இருந்தது.பொது பணவீக்கம் அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை இம்மாத தொடக்கத்தில் 0.50 சதவீதம் உயர்த்தியது.கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து இதுவரையிலுமாக, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ஒன்பது முறை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|