கத்தாரில் பெருமளவில் முதலீடு செய்கிறது எக்ஸான்மொபில்கத்தாரில் பெருமளவில் முதலீடு செய்கிறது எக்ஸான்மொபில் ... பாமாயில், கடலை பருப்பு உயர்வு  மிளகாய் வத்தல் விலையும் உயரலாம் பாமாயில், கடலை பருப்பு உயர்வு மிளகாய் வத்தல் விலையும் உயரலாம் ...
இலங்கை சாலைகளில் நானோ கார் : டாடா திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2011
16:45

புதுடில்லி: உலகின் மிககுறைந்த விலைக்காரான டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கை சாலைகளில் ஓட உள்ளது. ஆரம்பித்த புதிதில், அனைவரும் விரும்பும் வாகனமாக இருந்த நானோ, அதில் உள்ள குறைபாடு, திடீரென்று தீப்பிடித்தது உள்ளிட்ட காரணங்களினால் அ‌தன் மீதான மதிப்பு மற்றும் விற்பனை ஆட்டம் காண துவங்கியது. மாதத்திற்கு 500 கார்கள் மட்டுமே விற்பனை என்ற இக்கட்டான நிலைக்கு நானோ கார் தள்ளப்பட்டது நினைவிருக்கலாம். இதன்பின், பல அதிரடி சலுகைகளை அறிவித்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். புதிதாக கார் வாங்குபவர்களுக்கு 4 ஆண்டுகால பராமரிப்பு கட்டணம் இலவசம் என்று முதலில் அறிவித்த டாடா நிறுவனம், பின், பழைய கார்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என அறிவித்தது. இதன்பின்னர், நானோ காரின் விற்பனை கணிசமாக உயர துவங்கியது. உலகின் மிகக்குறைந்த விலை கார் என்று பெயர் எடுத்த நானோ கார், இந்தியாவில் மட்டும் ஓடுவது சரியில்லை என்றும், சர்வதேச நாடுகளிலும் நானோ கார் ஓடும் வகையிலான முடிவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்தது. இதன் ஒருபகுதியாக, நானோ காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டது. ‌அமெரிக்கா, ‌ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நானோ காரை ஏற்றுமதி செய்த டாடா நிறுவனம், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, 500 கார்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும், பின், கார்களின் எண்ணிக்கையை மாதத்திற்கு 200 என்ற அளவில் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)