பதிவு செய்த நாள்
29 மே2011
02:46
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில், கொண்டைக்கடலை, பொரிகடலை, நிலக்கடலை பருப்பு, புண்ணாக்கு விலை உயர்ந்துள்ள நிலையில், மிளகாய் வத்தல் வரத்து குறைவால் விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.விருதுநகர் மார்க்கெட்டில் சர்க்கரை விலை மூடைக்கு 2795 லிருந்து 2785 ரூபாயாக குறைந்துள்ளது. கடலெண்ணெய் டின்னுக்கு 1350 லிருந்து 1380,ரூபாயாகவும், சூரிய காந்தி எண்ணெய் 1170, பாமாயில் 910 லிருந்து 950 ஆகவும், நிலக்கடலைப் பருப்பு 4100 லிருந்து 4,300 , கடலைப் புண்ணாக்கு மூடை 2800 லிருந்து 3000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. உளுந்து விலை மூடைக்கு 4900 லிருந்து 4800 , சுமார் ரக உளுந்து 4100 லிருந்து 4900, பர்மா பருவட்டு உளுந்து 5100 லிருந்து 4900 ரூபாயாக உள்ளது. நயம் உளுந்தம் பருப்பு 6400 , பர்மா பருவட்டு பருப்பு 6200 ரூபாயாகவுள்ளது. துவரை 3800 லிருந்து 3600 , பொடி துவரை 3000 லிருந்து 2800 ஆக குறைந்துள்ளது. துவரம் பருப்பு 5700, பொடி துவரம் பருப்பு 4600 ரூபாயாக உள்ளது. பாசிப்பயறு 6400, லயன் பருவட்டு 3900 ,சுமார் ரகம் 3700 ரூபாயாகவும் உள்ளது. பாசிப்பருப்பு 5700, சுமார் ரகம் 5500 ரூபாயாக உள்ளது. மைதா 2180 ,ரவை 2140 லிருந்து 2170 ஆக உயர்ந்துள்ளது. கொண்டைக்கடலை 2700, பொரிகடலை 2080 ரூபாயாக உள்ளது. மிளகாய் புது வத்தல் 8400, சுமார் ரகம் 7500 லிருந்து 8000, முண்டு வத்தல் 7000 லிருந்து 7500 ஆக உள்ளது. சோடை வத்தல் 3200, பழைய சோடை வத்தல் 2400 ரூபாயாகவும் உள்ளது. 'மிளகாய் வத்தல் வரத்து குறைந்துள்ளதாலும், கோடையை முன்னிட்டு ஆந்திர மிளகாய் மார்க்கெட் மூடப்பட்டிருப்பதாலும் வத்தல் விலை தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாக,' வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|