பதிவு செய்த நாள்
29 மே2011
02:47
புதுடில்லி:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மே 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 104 கோடி டாலர் (4,784 கோடி ரூபாய்) அதிகரித்து, 30 ஆயிரத்து 853 கோடி டாலராக (14 லட்சத்து 19 ஆயிரத்து 256 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சென்ற 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 204.20 கோடி டாலர் (9,393.20 கோடி ரூபாய்) சரிவடைந்து, 30 ஆயிரத்து 739 கோடி டாலராக (14 லட்சத்து 14 ஆயிரத்து 7 கோடி ரூபாய்) இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணிகளின் மதிப்பு, 106 கோடி டாலர் (4,876 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 70 லட்சம் டாலர் (3,220 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. சென்ற வாரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான, ஸ்டெர்லிங், யென் மற்றும் யூரோ உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதை தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|