கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் விலை குறைய வாய்ப்புகொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர் விலை குறைய வாய்ப்பு ... சிறு நகரங்களுக்கும் விமான சேவை : ஏர் இந்தியா அறிமுகம் சிறு நகரங்களுக்கும் விமான சேவை : ஏர் இந்தியா அறிமுகம் ...
பருவ மழை நன்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால் நடப்பாண்டில் நெல் உற்பத்தி அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2011
02:50

புதுடில்லி:நடப்பாண்டில் பருவ மழை நன்கு இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.எனவே, நாட்டின் நெல் விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகரிக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பு, 4.20 - 4.30கோடி எக்டேர் என்ற அளவிலேயே இருக்கும். எனினும், பருவமழை நன்கு இருக்கும் என்று கணிக் கப்பட்டுள்ளதால், நெல் விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமேற்கு மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நெல் பயிரிட்டு வந்த விவசாயிகளில் சிலர், மக்காச்சோளம்,பருத்தி ஆகியவற்றை பயிரிடத் தொடங்கியுள்ளனர். இதனால் இப்பகுதிகளில் நெல் விளைச்சல் குறையும் என்றாலும், அதை ஈடு செய்யும் விதத்தில் கிழக்கு மாநிலங்களின் நெல் விளைச்சல் இருக்கும்' என்று தெரிவித்தார்.கடந்த 2008-09ம் ஆண்டு, இந்தியாவின் நெல் உற்பத்தி 10கோடி டன் என்ற சாதனை அளவை எட்டியது. அடுத்து வந்த ஆண்டுகளில், வறட்சியால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த 2009-10ம் ஆண்டு நெல் உற்பத்தி 8 .90கோடி டன்னாகவும், 2010-11ம் ஆண்டு, 9.40 கோடி டன் என்ற அளவிலும் இருந்தது.நடப்பாண்டில், பருவ மழை சாதகமாக இருக்கும் என்ற கணிப்பும், அரசு நிர்ணயித்த நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும், நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. ஆனால், விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு, குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லை என்பதால், நெல் பயிரிடும் பரப்பு சிறிதளவே உயரும் என்ற மதிப்பீடும் உள்ளது.இந்தியாவில், நெல் மகசூலை அதிகரிப்பதற்குத்தேவையான வளம் உள்ளது. உலகிலேயே, நெல் மகசூலில் எகிப்து முதல் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் ஒரு எக்டேரில் 9.73 டன் நெல் உற்பத்தி ஆகிறது. 13வது இடத்தில் உள்ள இந்தியாவில், ஒரு எக்டேரில் 3.37 டன் என்ற அளவிற்கு நெல் உற்பத்தி உள்ளது. இந்தியாவில் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. எனினும் நிகர நெல் மகசூலில்,சீனாவிற்கு அடுத்த இடத் தில்தான் உள்ளது.இந்தியாவில் இருந்து, கடந்த 2009-10ம் ஆண்டில், 20 லட்சம் டன் பாசுமதி அரிசியும், ஒரு லட்சத்து 39 ஆயிரம் டன் பாசுமதி அல்லாத அரிசியும் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு 11 ஆயிரத்து 273 கோடி ரூபாய்.இந்திய விவசாயத்தில் பருவ மழை முக்கிய பங்கு வகிக்கிறது. நெல் சாகுபடிக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால் கோதுமை விவசாயம்போல், குறைந்த அளவு தண்ணீரில் நெல் சாகுபடிமேற்கொள்வதற்கான ஆய்வில், ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)