பதிவு செய்த நாள்
31 மே2011
00:35
தமிழகம், கேரளாவில்முட்டை விலை231 காசாக நிர்ணயம் நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 231 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர் விலையேற்றத்தால், கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நாமக்கலில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர்.இதையடுத்து, 228 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 3 காசுகள் உயர்த்தி, 231 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை தொடர் ஏற்றம் கண்டுவருவது, கோழிப்பண்ணையாளர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம்:ஐதராபாத், 198 காசுகள், விஜயவாடா, தனுகு, 199, சென்னை, 233, மைசூரு, 222, பெங்களூரு, 220, மும்பை, 224, டில்லி, 220, பர்வாலா, 208, கோல்கட்டா, 238 காசுகள்.இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கலில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 38 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை, 56 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|