நாட்டின் அன்னியச் செலாவணி  கையிருப்பு ரூ.7,728  கோடி உயர்வுநாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.7,728 கோடி உயர்வு ... நாட்டின் வேளாண் உற்பத்தி 6.6 சதவீதம் உயர்வு நாட்டின் வேளாண் உற்பத்தி 6.6 சதவீதம் உயர்வு ...
ரூ.50,000 மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்தினால் 'பான் கார்டு' அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
04:24

புதுடில்லி:இனி உயர் மதிப்புள்ள நகைகளை வாங்கினாலோ, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலோ, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்தினாலோ, கண்டிப்பாக, 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்கும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது.நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன்படி, இனி 5 லட்சத்திற்கு மேல் நகைகள் வாங்கினால், கண்டிப்பாக, 'பான் கார்டு' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்துவோர், வங்கிகளில் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிப்போர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர், கண்டிப்பாக நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், இந்த புதிய நடைமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, சொத்து பரிமாற்றம், இரண்டு சக்கர வாகனங்கள் தவிர, இதர வாகனங்களை விற்பனை செய்யும் போதோ அல்லது வாங்கும் போதோ, நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம். மேலும், வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்யும் போதும், கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போதும், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஓட்டல் அறை வாடகை செலுத்தும் போதும், கண்டிப்பாக நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)