பதிவு செய்த நாள்
05 ஜூன்2011
04:24
புதுடில்லி:இனி உயர் மதிப்புள்ள நகைகளை வாங்கினாலோ, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலோ, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்தினாலோ, கண்டிப்பாக, 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்கும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது.நாட்டில் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன்படி, இனி 5 லட்சத்திற்கு மேல் நகைகள் வாங்கினால், கண்டிப்பாக, 'பான் கார்டு' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்க உள்ளது.மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்துவோர், வங்கிகளில் டெபிட் கார்டுக்கு விண்ணப்பிப்போர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோர், கண்டிப்பாக நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், இந்த புதிய நடைமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது, சொத்து பரிமாற்றம், இரண்டு சக்கர வாகனங்கள் தவிர, இதர வாகனங்களை விற்பனை செய்யும் போதோ அல்லது வாங்கும் போதோ, நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம். மேலும், வங்கிகளில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்யும் போதும், கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போதும், 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ஓட்டல் அறை வாடகை செலுத்தும் போதும், கண்டிப்பாக நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|