அஞ்சலக சேமிப்பிற்கு4சதவீத வட்டி: ரிசர்வ் வங்கி பரிந்துரைஅஞ்சலக சேமிப்பிற்கு4சதவீத வட்டி: ரிசர்வ் வங்கி பரிந்துரை ... ஜனவரி - மார்ச் மாதங்களில் வருவாய் வளர்ச்சியில் வாகனத்துறை முதலிடம் ஜனவரி - மார்ச் மாதங்களில் வருவாய் வளர்ச்சியில் வாகனத்துறை முதலிடம் ...
நடப்பு 2011ம் ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2011
23:53

சிங்கப்பூர்: உலகளவில், நடப்பு 2011ம் ஆண்டில், விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் லாபம், 400 கோடி டாலராக (18 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) குறையக்கூடும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஐயட்டா) மதிப்பிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டில், இவற்றின் லாபம் 1,800 கோடி டாலர் (82 ஆயிரத்து 800 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது. ஆக, நடப்பு ஆண்டில், இவற்றின் லாபம் 78 சதவீதம் சரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில், நடப்பாண்டில் விமானப் போக்குவரத்து சேவை துறை, பெரிய அளவில் பாதிக்கப்படும் என, 'ஐயட்டா' மதிப்பிட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள், ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் உருவாகியுள்ள அரசியல் சூழல் போன்ற காரணங்களால், நடப்பாண்டில், இந்நாடுகளில் விமானப் போக்குவரத்து சேவை பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உலகளவில், ஆசியா - பசிபிக் மண்டலங்களில் இயக்கப்படும் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் தான் லாபகரமாக செயல்படுகின்றன. உலக விமானப் போக்குவரத்தில், இந்த மண்டலங்களின் பங்களிப்பு, 40 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், சீனா, இந்தியா உட்பட இந்த மண்டலங்களில் இயக்கப்படும் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் லாபம், 210 கோடி டாலராக (9 ஆயிரத்து 660 கோடி ரூபாய்) குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 2010ம் ஆண்டில், 1,000 கோடி டாலராக (46 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.இந்நிலையில், நடப்பாண்டில், விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் லாபம் 400 கோடி டாலர் (18 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) என்ற அளவில் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக, 'ஐயட்டா' அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் கூறுகையில், 'நடப்பாண்டில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 96 டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து ஒரு பீப்பாய் 110 டாலர் என்ற அளவில் நீடிக்கிறது. விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் லாபம் குறைவதற்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு தான் முக்கிய காரணமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை, ஒவ்வொரு டாலர் உயரும் @பாதும், விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு 160 கோடி டாலர் (7 ஆயிரத்து 360 கோடி ரூபாய்) அளவிற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதேசமயம், நடப்பு ஆண்டில், பயணிகள் விமானப் போக்குவரத்து 4.4 சதவீதமும், சரக்கு விமானப் போக்குவரத்து 5.6 சதவீதமும் வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, விமான டிக்கெட் மீது, இந்திய அரசு சேவை வரி விதிப்பதற்கு, 'ஐயட்டா' எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு கூடுதலாக 45 கோடி டாலர் (2,070 கோடி ரூபாய்) அளவிற்கு கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)