பதிவு செய்த நாள்
08 ஜூன்2011
23:57
ஆமதாபாத்: பஞ்சாப், அரியானா மாநிலங்களில், 'புசா-1121' ரக பாசுமதி நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், பாசுமதி அரிசி விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் பஞ்சாப், அரியானா, உத்தர பிர@தசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் அதிகளவில் பா”மதி நெல் பயிரிடப்படுகிறது. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பாசுமதி நெல் சாகுபடி, வரும் ஜூலையில் துவங்க உள்ளது. இதற்கான உழவுப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இம்மாநிலங்களில், 2008ல், 'புசா-1121' ரக பாசுமதி அரிசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக மகசூலும், நல்ல வருவாயும் கிடைத்ததால், விவசாயிகள் இவ்வகை நெல் சாகுபடியில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதனால், சாகுபடி பரப்பளவும் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது.பஞ்சாபில், 2008-09ல், 3.5 லட்சம் எக்@டரில் பாசுமதி நெல் சாகுபடி @மற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 10 லட்சம் டன் பாசுமதி நெல் உற்பத்தியானது. இதை தொடர்ந்து, 2009-10ல், சாகுபடி பரப்பளவு 5.15 லட்சம் எக்@டராகவும், உற்பத்தி 13.6 லட்சம் டன் என்ற அளவிலும் அதிகரித்தது. நடப்பு 2011-12ம் பருவத்தில், பாசுமதி நெல் சாகுபடி பரப்பளவு 20 சதவீதம் அதிகரித்து, ஆறு லட்சம் டன்னாகவும், உற்பத்தி 16.50 லட்சம் என்ற அளவிலும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.என@வ, பாசுமதி நெல் உற்பத்தி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் @தவையை விட உபரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாசுமதி அரிசி விலை குறைய வா#ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்து வருகிறது.விவசாயிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளின் @தவையை கருத்தில் கொண்டு, பாசுமதி சாகுபடி பரப்பளவை அதிகரித்து வருகின்றனர். நம் நாடு, ஆண்டுக்கு 50 லட்சம் டன் பாசுமதி அரிசியை உற்பத்தி செய்கிறது. இது, உலகளவிலான உற்பத்தியில் 70 சதவீதம். இந்திய பாசுமதி அரிசிக்கு ஐ@ராப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் அதிக வர@வற்பு உள்ளது. குறிப்பாக, இந்திய பாசுமதி அரிசி இறக்குமதியில் சவூதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|