பதிவு செய்த நாள்
11 ஜூன்2011
16:47
ரகுநாத்கஞ்ச் (மேற்குவங்கம்) : 2012ம் ஆண்டிற்குள், நாட்டிலுள்ள 73 ஆயிரம் கிராமங்களில் வங்கிச் சேவை விரிவுபடுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் ரகுநாத்கஞ்ச் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தலாய் நகரில், பஞ்சாப் நேஷனல் வஙகி்யின் கிளையை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். அதன்பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, 2012ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள், 73 ஆயிரம் கிராமங்களுக்கு வங்கிச்சேவையை விரிவுபடுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகி்ன்றன. தற்போது இங்கு திறக்கப்பட்டிருப்பது 117 கிளை என்றும், இது பஞ்சாப் நேஷனல் வங்கியின் 117 ஆண்டு சேவையை கவுரவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எதிர்காலத்தில், வங்கியின் சேவைகள் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம் என அவர் கூறினார். பின் அவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வேளாண் பயிற்சி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|