பதிவு செய்த நாள்
18 ஜூன்2011
00:05
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில், பருவ நிலை மாறுபாடுகளால், ஆப்பிள் விளைச்சல் 50 சதவீதம் அளவிற்கு பாதிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டில், ஆப்பிள் விளைச்Œலில்,காஷ்மீர் மாநிலத்தை அடுத்து, இமாச்சலப்பிரதேசம் உள்ளது. இம்மாநிலத்தில், கடந்த ஆண்டு ஆப்பிள் விளைச்Œல் அமோகமாக இருந்தது. இதனால் ஆப்பிள் உற்பத்தி 4.50 கோடி பெட்டிகள் (தலா 20 கிலோ எடையில்) என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது. நடப்பாண்டில், தட்ப வெப்பம்சரியில்லாததால், ஆப்பிள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, 2.25 கோடி பெட்டிகள் என்ற அளவிலேயே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், மண்ணில் போதிய ஈரப்பதம் இருப்பதால், ஆப்பிள் அதிக ஊட்டச்Œத்துடன் ”வையாக இருக்கும்,சாறு நிறைந்ததாக இருக்கும் என்று தோட்டக் கலைத்துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, இமாச்சலப்பிரதேச தோட்டக்கலைத் துறை இயக்குனர் குருதேவ் சிங் கூறுகையில், 'பூக்கும் காலத்தில், குளிர்காலம் நீடித்தது, ஆலங்கட்டி மழை பெய்தது போன்றவற்றால், நடப்பாண்டு ஆப்பிள் விளைச்சல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.ஆப்பிள் தோட்ட உரிமையாளர் அதுல் கெம்தா கூறுகையில், 'ஏப்ரல் மாதத்தில், ஆப்பிளுக்கு 18 முதல் 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் சீதோஷ்ண நிலை தேவைப்படும். ஆனால், நடப்பாண்டின், ஏப்ரல் மாதத்தில், அடிக்கடி மழை பெய்து, சீதோஷ்ண நிலை 14 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருந்தது. சீதோஷ்ண மாற்றம் காரணமாக செர்ரி பழங்கள் விளைச்சலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|