பெரும் சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்பெரும் சரிவுடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... சென்ற ஏப்ரல் மாதத்தில்இயற்கை எரிவாயு, உரம் உற்பத்தி சரிவு சென்ற ஏப்ரல் மாதத்தில்இயற்கை எரிவாயு, உரம் உற்பத்தி சரிவு ...
இந்தாண்டு இறுதி்க்குள் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது குவல்காம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2011
16:37

புதுடில்லி : அமெரிக்காவின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான குவல்காம், இந்தாண்டு இறுதிக்குள் நான்காம் தலைமுறை (4ஜி) தொழில்நுட்ப சேவையை அடிப்படையாகக் கொண்ட பிராட்பேண்ட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. குவல்காம் நிறுவனம், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே இதற்கான உரிமையை 4 சர்க்கிள்களில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த குவல்காம் (இந்தியா மற்றும் தெற்காசியா நாடுகள்) தலைவர் கன்வலீந்தர் சிங் கூறியதாவது, இந்த 4 ஜி சேவையை அறிமுகப்படுத்த தாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இதற்கான நான்கு கட்டங்களாக பணியை வகுத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றோம். முதற்கட்டமாக பிராட்பேண்ட் நிறுவனங்களோடு உடன்பாடு, இரண்டாம் கட்டமாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான முதலீடு மற்றும் அதற்கான சூழ்நிலையை மேம்படுத்துதல், மூன்றாம் கட்டமாக இந்த சேவைக்காக பல்வேறு ஆப‌ரேட்டர் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுதல் மற்றும் இறுதியா‌க சேவையை அறிமுகப்படுத்துதல். தற்போது தாங்கள் மூன்றாம் கட்ட பணிகளில் உள்ளோம். ஆபர‌ேட்டர் நிறுவனங்களோடு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தங்களுக்கு இணைந்து செயல்பட உள்ள ஆபரேட்டர் நிறுவனங்கள், சர்க்கிள்களில் இந்த சேவையை வழங்குவதற்கான நிதியுதவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் நிதியுதவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ள ஆபரேட்டர் நிறுவனங்கள், இந்த சேவையை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர துணிந்தால் தாங்கள் அவர்களை விட்டு விலக தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். குவல்காம் நிறுவனம், டைம் டிவிசன் டியூப்லெக்ஸ் லாங் டெர்ம் எவலூசன்( டிடீடீ-எல்டிஇ) தொழில்நுட்பம் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவைகளை டில்லி, மும்பை, ஹரியானா மற்றும் கேரளா உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக வழங்கி வருகிறது. தாங்கள் இந்த நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை தங்கள் வசம் வைத்திருப்பதாகவும், எஞ்சிய பங்குகள் துலிப் டெலிகாம் ஜிடிஎல் நிறுவனத்திடம் உள்ளது. தற்போது, இந்த 4ஜி சேவைக்காக எல்டிஇ நிறுவனத்தை பார்ட்னராக கொண்டு துவக்கப்பட உள்ளதாகவும், பெரும்பாலும் இந்த சேவை இந்தாண்டு இறுதியிலோ அல்லது 2012ம் ஆண்டு துவக்கத்திலோ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)