பதிவு செய்த நாள்
23 ஜூன்2011
15:10
ஜப்பானை சேர்ந்த டொயோட்டோ நிறுவனமும், இந்தியாவை சேர்ந்த கிர்லோஸ்கர் நிறுவனமும் இணைந்து செயல்படுகின்றன. இந்த நிறுவனம் சார்பில் கடந்த 2003ம் ஆண்டு டொயோட்டோ கரோலா கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 70 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கரோலா அல்டீஸ் காரின் புதிய வேரியன்டை, இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தியுள்ளது. 1,798 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த கார், பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கும். இதில் பெட்ரோல் காரின் விலை ரூ.10.53 லட்சத்தில் இருந்து ரூ.14.77 லட்சம் வரையும், டீஸல் காரின் விலை ரூ.11.46 லட்சத்தில் இருந்து ரூ.14.55 லட்சம் வரையும் இருக்கும். ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால், டொயோட்டா கார்கள் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணளமாக, நடப்பு ஆண்டில் இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ஒரு லட்சத்து 50 ஆயிரம் கார்களுக்கு பதிலாக, ஒரு லட்சத்து 40 ஆயிரம் கார்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்று டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன துணை நிர்வாக இயக்குநர்( மார்க்கெட்டிங்) சந்தீப் சிங், தெரிவித்துள்ளார். இதுதவிர, டொயோட்டா எதியோஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்ட போது, டெலிவரிக்காக அதன் காத்திருப்பு காலம் ஆறு மாதமாக இருந்தது. தற்போது அது இரண்டு மாதமாக குறைந்துள்ளது. மேலும், இன்னோவா காரின் உற்பத்தி மாதத்துக்கு 4,000 கார்கள் என்பதில் இருந்து 4,800 கார்கள் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|