பதிவு செய்த நாள்
30 ஜூன்2011
23:48
மும்பை,: நடப்பாண்டு ஜூன் 17ம் தேதி வரையிலான ஓர் ஆண்டு காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன்கள், 20.9 சதவீதம் அதிகரித்து, 41 லட்சத்து 23 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 34 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.இதே ஓராண்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டிபாசிட், 17.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 46 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 54 லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் கடன், கடந்த நிதியாண்டை விட, சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி செலவினம்அதிகரித்துள்ள நிலையிலும், பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, தொழில்துறையினர் பெறும் வங்கி கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் கடன் 19 சதவீதம் என்ற அளவிலும், திரட்டப்படும் டிபாசிட், 17 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.அதேசமயம், கடந்த 2010-11ம் நிதியாண்டில், வங்கிகள் வழங்கிய கடன் 21.5 சதவீதம் என்ற அளவிலும், திரட்டப்பட்ட டிபாசிட் 15.5 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்திருந்தது. öŒன்ற ஆண்டு டிŒம்பரில், வங்கிகள் வழங்கும் கடனுக்கும், திரட்டும் டிபாசிட்டுக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்திருந்தது. ஆனால், öŒன்ற மார்ச் மாதத்துடன் முடிந்த முழு நிதியாண்டில், இந்த இடைவெளி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|