நேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட் : அசத்தும் வலைதளங்கள்நேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட் : அசத்தும் வலைதளங்கள் ... மின் வாரிய கடன் பத்திர வெளியீட்டிற்கு வரவேற்பு மின் வாரிய கடன் பத்திர வெளியீட்டிற்கு வரவேற்பு ...
வங்கிகள் வழங்கிய கடன் 21 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2011
23:48

மும்பை,: நடப்பாண்டு ஜூன் 17ம் தேதி வரையிலான ஓர் ஆண்டு காலத்தில், வங்கிகள் வழங்கிய கடன்கள், 20.9 சதவீதம் அதிகரித்து, 41 லட்சத்து 23 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே காலத்தில், 34 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.இதே ஓராண்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டிபாசிட், 17.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 46 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 54 லட்சத்து 94 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் கடன், கடந்த நிதியாண்டை விட, சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி செலவினம்அதிகரித்துள்ள நிலையிலும், பொருளாதார வளர்ச்சியின் காரணமாக, தொழில்துறையினர் பெறும் வங்கி கடன் அதிகரிக்க வாய்ப்புள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், வங்கிகள் வழங்கும் கடன் 19 சதவீதம் என்ற அளவிலும், திரட்டப்படும் டிபாசிட், 17 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.அதேசமயம், கடந்த 2010-11ம் நிதியாண்டில், வங்கிகள் வழங்கிய கடன் 21.5 சதவீதம் என்ற அளவிலும், திரட்டப்பட்ட டிபாசிட் 15.5 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்திருந்தது. öŒன்ற ஆண்டு டிŒம்பரில், வங்கிகள் வழங்கும் கடனுக்கும், திரட்டும் டிபாசிட்டுக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்திருந்தது. ஆனால், öŒன்ற மார்ச் மாதத்துடன் முடிந்த முழு நிதியாண்டில், இந்த இடைவெளி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)