பதிவு செய்த நாள்
30 ஜூன்2011
23:50
- நமது சிறப்பு நிருபர் - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கு, முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.'டான்ஜெட்கோ' என்று ”ருக்கமாக அழைக்கப்படும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அதன் விரிவாக்கத் திட்டத்திற்காக, 500 கோடி ரூபாய்க்கு கடன்பத்திரங்களை வெளியிட்டது. 900 கோடி ரூபாய் வரையில் முதலீட்டை அதிகரித்துக் கொள்ளும் வŒதி கொண்ட இந்த கடன்பத்திர வெளியீட்டில்,முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டுள்ளனர்.தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. தனியார் மின் நிறுவனங்கள், காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு பெருந்தொகை நிலுவையில் உள்ளது.மேலும், நபார்டு வங்கி, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், லஷ்மி விலாஸ் வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இக்கழகம் அதிகளவில் கடன் பெற்றுள்ளது.இந்த கடன்களை அடைத்து, மின் வாரியத்தை சீரமைக்க,அ.தி.மு.க., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், மின்வாரியத்தின் கடன் சுமை இரண்டு மடங்கு உயர்ந்து விட்டதால், அதை சரி செய்ய மத்திய அரசிடம், 640 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 'டான்ஜெட்கோ' நிறுவனம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் வினியோகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி 10 ஆண்டு முதிர்வு காலத்தை கொண்ட 500 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.முதலீட்டாளர்களின் ஏகோபித்த வரவேற்பு காரணமாக, குறுகிய காலத்தில் இக்கடன் பத்திர விற்பனை வாயிலாக, 500 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.இக்கடன் பத்திரங்கள் வேண்டி, மேலும் ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததையடுத்து, திரட்டப்படும் நிதியை 900 கோடி ரூபாயாக உயர்த்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைந்த இக்கடன் பத்திர வெளியீட்டிற்கு முதலீட்டாளர் களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|