வங்கிகள் வழங்கிய கடன் 21 சதவீதம் அதிகரிப்புவங்கிகள் வழங்கிய கடன் 21 சதவீதம் அதிகரிப்பு ...  சோப்பு, ஷாம்பூ விலையை குறைக்குமா நிறுவனங்கள்? சோப்பு, ஷாம்பூ விலையை குறைக்குமா நிறுவனங்கள்? ...
மின் வாரிய கடன் பத்திர வெளியீட்டிற்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2011
23:50

- நமது சிறப்பு நிருபர் - தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கு, முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.'டான்ஜெட்கோ' என்று ”ருக்கமாக அழைக்கப்படும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அதன் விரிவாக்கத் திட்டத்திற்காக, 500 கோடி ரூபாய்க்கு கடன்பத்திரங்களை வெளியிட்டது. 900 கோடி ரூபாய் வரையில் முதலீட்டை அதிகரித்துக் கொள்ளும் வŒதி கொண்ட இந்த கடன்பத்திர வெளியீட்டில்,முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டுள்ளனர்.தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. தனியார் மின் நிறுவனங்கள், காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு பெருந்தொகை நிலுவையில் உள்ளது.மேலும், நபார்டு வங்கி, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், லஷ்மி விலாஸ் வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இக்கழகம் அதிகளவில் கடன் பெற்றுள்ளது.இந்த கடன்களை அடைத்து, மின் வாரியத்தை சீரமைக்க,அ.தி.மு.க., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில், மின்வாரியத்தின் கடன் சுமை இரண்டு மடங்கு உயர்ந்து விட்டதால், அதை சரி செய்ய மத்திய அரசிடம், 640 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 'டான்ஜெட்கோ' நிறுவனம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் வினியோகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி 10 ஆண்டு முதிர்வு காலத்தை கொண்ட 500 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.முதலீட்டாளர்களின் ஏகோபித்த வரவேற்பு காரணமாக, குறுகிய காலத்தில் இக்கடன் பத்திர விற்பனை வாயிலாக, 500 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.இக்கடன் பத்திரங்கள் வேண்டி, மேலும் ஏராளமான விண்ணப்பங்கள் வந்ததையடுத்து, திரட்டப்படும் நிதியை 900 கோடி ரூபாயாக உயர்த்தி கொள்ள முடிவு செய்யப்பட்டது.ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைந்த இக்கடன் பத்திர வெளியீட்டிற்கு முதலீட்டாளர் களிடமிருந்து அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)